India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் மேலும் கூடுதலாக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் இன்று மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுடன் மலை இரயில் பயணத்திற்கும் உலகப் புகழ்பெற்றது. இந்நிலையில் தினமும் குன்னூர் உதகை, மேட்டுப்பாளையம் உதகை என மலை ரயில் சேவை நடைபெற்று வரும் நிலையில் வரும் கோடை சீசனை முன்னிட்டு உதகை கேத்தி, கேத்தி உதகை இடையேயான மார்க்கத்தில் சிறப்பு மலை இரயில் சேவையை வரும் வெள்ளி முதல் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்கள் இயக்க தென்னக இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை, அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து சர்மிளாஜியை நீக்கம் செய்த அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவி முறைகேடு செய்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி பதவி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் மீண்டும் அவருக்கு பதிவு வழங்க உத்தரவிட்டுள்ளது.
தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவை சேர்ந்தவர் அன்பு பகுர்தீன் என்பவரின் மகன் சேக்தாவூத் (38). இவரது வீட்டில் என்ஐஏ பிரிவு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேக்தாவூத் மற்றும் அவரின் தந்தை அன்பு பகுர்தீன் வீடுகளில் நடத்தப்பட்டுவரும் இந்த சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளா் விஜயன், தனது சொத்து விவரங்களை வேட்பு மனு தாக்கலின்போது சமர்ப்பித்தார். அதன்படி, அவரது வங்கிக் கணக்கில் ரூ.1.54 லட்சமும், அசையும் சொத்தாக ரூ.3.61 கோடியும், அசையா சொத்தாக ரூ.2.21 கோடியும் உள்ளது; மேலும் ரூ.4.82 கோடி கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்; அவரது மனைவி கவிதா பெயரில் அசையும் அசையா சொத்தாக ரூ.6.17 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதுபட்டாணியர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பழனியம்மாள். இவர் சம்பவத்தன்று இரவு தூங்க சென்று, அதிகாலை எழுந்து பார்த்தபோது அவரின் இரும்புபெட்டியில் வைத்திருந்த 6 பவுன் செயின், 1 பவுன் பவுன் செயின என 7 பவுன் நகை, ரூ.15 ரொக்கம் திருடுபோயிருந்தது. இது குறித்து நேற்று(மார்ச் 26) அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை வரும் ஞாயிறு (மார்ச். 31) முதல் கோவையில் 9 நாட்கள் பரப்புரை செய்ய உள்ளார் என பாஜக கோவை அலுவலகம் தெரிவித்துள்ளது. இம்முறை கோவை தொகுதியில் பாஜக, திமுக, அதிமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் சிபிஎம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல், ராயபுரம், ஆழ்வார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மார்ச் 26) மட்டும், ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1.42 கோடியை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி முதல் துவக்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 3மணியுடன் வேட்புமனு நிறைவடைகிறது. மதுரை தொகுதியில் போட்டியிட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(60). விவசாயியான இவர் குடும்ப பிரச்னை காரணமாக, தனது விவசாய நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது மகன், ராமசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.