India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியின் மெட்ரோ வழித்தடங்கள் நேற்று வெளியிடப்பட்டது. சமயபுரம் முதல் வயலூர் வரை செல்லும் வழித்தடத்தில் 17 நிறுத்தங்கள் இடம் பெற்றுள்ளன. துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை செல்லும் வழித்தடத்தில் 16 நிறுத்தங்களும் வழி 1 – சமயபுரம் முதல் வயலூர் (18.7 கி.மீ)
வழி 2 – துவாக்குடி முதல் பஞ்சப்பூர் (26 கி.மீ) வழி 3 – ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் (23.3 கி.மீ) அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள புகழ்மிக்க அய்யாவழி இயக்கத்தின் தலைமைபதியான சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமிபதியில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, அய்யா வழி பாடகர் சிவச்சந்திரன் மற்றும் பாஜகவினர் வந்திருந்தனர்.
நாமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக ஓ.பி.எஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ் என்ற பெயரில் நேற்று ஒருவர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதேபோல் இன்று மேலும் 3 பேர் ஓபிஎஸ் என்ற பெயரில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயரில் 5 பேர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5 % உள் ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வேண்டி அனைத்து கட்சியினருக்கும் மனுவாக அளித்தனர். எந்த கட்சியும் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதனால் பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என்று பெரம்பலூர் மாவட்ட மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் திருச்சி மாவட்டத்தில் 16,983 மாணவர்களும், 16,826 மாணவிகளும் என மொத்தம் 33,809 பேர் தேர்வு எழுதுகின்றனர். 169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் 63பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலையை சிறு கைதிகள் 9 பேர் 10வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.பி டி.ஆர்.பாலுவை, அமைச்சர் சேகர்பாபு இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.அப்போது, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல், காரப்பாக்கம் கணபதி மற்றும் பகுதி செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.
தமிழக முழுவதும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. இதனையடுத்து இன்று திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு மையங்களில்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ, மாணவிகள் எழுதினர். இதனை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் திடிரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்தால் அது பெரும் அவமானம் எனச் முதல்வர் ஸ்டாலின் விளாசி உள்ளதாக கூறினார் . ஒருவேளை மீண்டும் மோடியே ஆட்சிக்கு வந்து விட்டால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் T.நாராயணசாமி வெற்றிக்காக இன்று 26.3.2024 அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் முருக்கோடை இராமர் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் தேர்தல் பணிகள் எவ்வாறு செய்வது குறித்தும் நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினர்.
மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில், தோ்தல் தொடா்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவாரூரில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
Sorry, no posts matched your criteria.