India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கான முதல் பயிற்சி முகாம் நேற்று காலை 9.30 முதல் மாலை 5 வரை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. உமா அவர்கள் தலைமையில் அதிகாரிகள் முகாமை பார்வையிட்டனர். இந்த முகாமில் வாக்காளர் பெயரை சரிபார்த்தல், ஓட்டு எந்திரத்தை கையாளும் விதம் போன்றவற்றை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவரும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான வி.எம்.எஸ்.முகமது முபாரக், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தின் நிலவளம், நீா்வளம் முறையாக முறைப்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொண்டு வருவேன். இந்த தொகுதியின் உறுப்பினராக பொதுமக்கள் என்னைத் தோ்வு செய்தால், நாட்டிலுள்ள 543 தொகுதிகளிலும் முன் மாதிரி தொகுதியாக திண்டுக்கல்லை மாற்றுவேன் என்றார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் அனிதா. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் வலதி என்பவர் 3 மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்தார். இதைக் கேட்டபோது அனிதாவை அவதூறாக பேசி மிரட்டினார். இதுகுறித்து அனிதா அளித்த புகாரின்படி தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வலதியை நேற்று (மார்ச் 24) கைது செய்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது
குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்
அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டார். உடன் மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி ஆகியோர் உள்ளனர்.
சென்னை மாநகராட்சி, 24வது வார்டிற்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நேற்று(மார்ச் 24) நடைபெற்றது. அப்பகுதியில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் இப்தார் நிகழ்ச்சியில், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு கலந்து கொண்டு துவங்கி வைத்தார். பின்னர் இஸ்லாமிய சகோதரர்கள் சார்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.
கீழையூரை அடுத்த ஈசனூர் கட்டளை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(54). இவரது சகோதரரான சந்தியாகு(45). இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்த நிலையில், அந்த ஊரில் நடந்த துக்க நிகழ்வு இறுதி ஊர்வலத்தில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு சந்தியாகுவை, ஆரோக்கியசாமி மண்வெட்டி கொண்டு சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து ஆரோக்கியசாமியை போலீசார் கைது செய்தனர்
நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டமன்றத் தொகுதிகளான ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், பவானி சாகர், அவினாசி ஆகிய 6 தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (மார்ச் 24) மதியம் வரை 6 தொகுதிகளில் மொத்தம் ரூ.1,47,84,808 பறிமுதல் செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் நேற்று ஹிந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்ணனி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயற்குழு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்
இராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கீழக்காஞ்சிரங்குளம், எட்டிச்சேரி, கடமங்குளம், ஆத்திகுளம், நல்லூர், கீரனூர், வைத்தியனேந்தல் ஆகிய பகுதிகளில் அமமுக முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கோவை வழியாக செல்லும் கேரள ரயில்கள் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்தான செய்தி குறிப்பில், மார்ச் 26, 28, 30 ஆம் தேதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் வருவது தவிர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.