Tamilnadu

News March 26, 2024

தடங்கம் அருகே திடீர் தீவிபத்து

image

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சி, லப்பர்சி காலனி அருகே உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ) பா. வெங்கடேஷ் தலைமையிலான குழு, குழாய் வழியாக தண்ணீரை பீச்சு அடித்து கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 26, 2024

புதுச்சேரி: காரைக்காலில் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு

image

காரைக்காலில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 100% வாக்களிப்பு நடைபெற வலியுறுத்தி இன்று அரசு கூட்டுறவு பால் பாக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைவரும் வாக்களிப்போம், நேர்மையாக வாக்களிப்போம் என்ற தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகளை காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தொடங்கி வைத்தார்.

News March 26, 2024

தேனி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தேனி மாவட்டத்தில் விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்களோ 04546_261730 அல்லது 9363873078 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

திருப்பத்தூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது

image

அட்டியாவில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில வாலிபர்கள் 2 பேர், 10 கிலோ அளவில் கஞ்சா கடத்திச் சென்று இன்று  ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு பெங்களூர் நோக்கி பேருந்தில் செல்வதாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீசார் கந்திலி அருகே 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News March 26, 2024

சென்னையில் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம்

image

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தமிழக பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

News March 26, 2024

ஈரோட்டில் 10 கைத்தறி பூங்காக்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 100 கைத்தறிகள் அமைத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்புவோர் www.loomworld.in என்ற இணையதளத்தில் வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

செங்கல்பட்டு: கடலில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் காவல் நிலைத்து உட்பட்ட பனையூர் கிராமத்தில் இன்று (மார்ச்-26) நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு படிக்கும் பிரவீன் மற்றும் முகமது முசாதிக் ஆகிய 2 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலை கைப்பற்றி செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2024

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு!

image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோவிலில் (பாடைகட்டி மாரியம்மன்) புஷ்ப பல்லக்கு நடைபெறும் நாளான 31.03.2024 ஞாயிற்றுகிழமையன்றுவலங்கைமான் வட்டத்தில் செயல்படும் அரசு மதுபானக்கடை எண் 9660 மற்றும் 9627 மேலும் அதனை சார்ந்துள்ள மதுக்கடைகளையும் முழுவதுமாக மூட ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

திண்டிவனம்: இரு தரப்பு மோதல் – 2 பேர் கைது

image

திண்டிவனம் அடுத்த சலவாதியை சேர்ந்த ஐயப்பன், சத்தியமூர்த்தி இருவரும் நேற்று (மார்ச்.25) மொளசூர் அருகே பைக்கில் சென்ற போது, எதிரே வந்த கண்ணன், வசந்தகுமார் ஆகியோரது பைக் இவர்களது பைக் மீது மோதுவது போல் சென்றுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் ஐயப்பன் சத்தியமூர்த்தி இருவரையும் கைது செய்தனர்.

News March 26, 2024

கிருஷ்ணகிரி; பெண்ணிடம் மோசடி

image

கிருஷ்ணகிரி, உத்தனப்பள்ளி அருகே வெங்கடேஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பாள்(31), தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ்அப் செயலிக்கு மர்ம நபர், குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, சுந்தரம்பாள் பல தவணைகளாக ₹6.57 லட்சம் செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்த புகாரில் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!