India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி கூட்ரோடு வனப்பகுதியில் கார் மீது டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார் அவரை வரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்பி நகரைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. இவர் ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் .நேற்று சென்னையில் உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் கொள்ளை போனது. ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
திருவாடானை தாலுகா காரங்காடு மற்றும் நம்புதாளையில் இன்று திருவாடனை சட்டமன்ற தொகுதியில் தாசில்தார் ஸ்ரீதர் மாணிக்கம் தலைமையிலான சப் -இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊனப்பட்டிருந்த தி.மு.க. கொடிக்கம்பங்களை அதிரடியாக அகற்றினர்.
அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அமைச்சர் சிவசங்கரின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அஸ்தினாபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர்
காரில் பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவர் பயணத்தை தொடர அனுமதித்தனர்.
சென்னை: அசோக் நகர் வாசுதேவபுரம் பகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக, நேற்று நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல விடுத்துள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் புரளி என தெரியவந்தது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நெல்லைக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாநகர மாவட்ட தேமுதிகவினர் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க நிலை உயர்நிலை மேனிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை(மார்ச்.30) முழு வேலை நாள் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். எனவே நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, அஜித்குமார், கார்த்திக் உட்பட 6 இளைஞர்கள் நேற்று அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற ஒருவரிடம் அருவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் – ஆரணி செல்லும் சாலையில் மங்களமேடு பகுதியில் 2024 மக்களவை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்டார். ஆவணங்கள் முறையாக கையாளப்படுகிறதா? என பார்வையிட்ட அவர் பறக்கும் படையினர் சோதனையிடும் முறையை நேரடியாக ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டியை மையமாகக் கொண்டு முல்லைப் பெரியாறு ஆறு உள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கோடைகால விடுமுறையை ஆனந்த குளியல் இட்டு கழிக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், அனைத்து இளைஞர்களும் இங்கு வந்து ஆனந்த குளியல் இடுகின்றனர். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரைத் தொடங்கப்பட இருப்பதால் தண்ணீர் வரத்து சற்று மிக குறைவாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.