India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் பணப் பட்டுவாடா செய்ததாக பறக்கும் படையினர் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார் சூர்யா மற்றும் பாரதி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை, வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம்(50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கடந்த மாதம் முதல் இது வரை 5-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ரகுராம் நீரிழிவு நோயாளி என்பது குறிப்படத்தக்கது.
சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் சிவபெருமாள் 33. இவர் தனது ட்ராக்டரை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்து இருந்த நிலையில் அருகில் வசிக்கும் மாரியப்பன் தன் வீட்டிற்கு செல்ல டிராக்டர் இடையூறாக இருப்பதாக அதை அகற்ற கூறியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் மாரியப்பன் சிவபெருமாளின் காதை கடித்துள்ளார். காயமடைந்த சிவபெருமான் அளித்த புகாரில் மாரியப்பன் மீது வழக்குபதிவு.
நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக. உரிய பாதுகாப்புடன் நடத்த வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். பந்தநல்லூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டமானது மருங்கூர் V.S.N மஹாலில் நேற்று இரவு நடைப்பெற்றது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வானதி ஸ்ரீனிவாசன் எம் எல் ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்காததால் பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயற்குழு உறுப்பினரான வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நடைவண்டி சின்னம் ஒதுக்கீடு செய்தார்.
குடியாத்தம் அலங்காநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு நேற்று (மார்ச் 30) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
சென்னையின் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக, தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம், என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது
அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தினம் தோறும் விறகுகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவை கோவில் முன்பு மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 60 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்யப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவர் .
தர்மபுரி வட்டம், குமாரசாமி பேட்டை அடுத்த வேப்பமரத்து கொட்டாய் ,பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டில் நேற்று சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ)
பா.வெங்கடேசன் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.