India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த இடங்களில் தேர்தல் தொடர்பான செலவின புகார்களை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர் வருண்சோனியின் கைபேசி எண்ணில் 9363981394 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் கிடந்த பார்சலில் இருந்து 5 செல்போன்கள், குட்கா, பீடி உள்ளிட்டவற்றை காவலர்கள் நேற்று கைப்பற்றினர். காலாப்பட்டு மத்திய சிறைக்கு பார்சல் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுச்சேரி மத்திய சிறைக்கு வீசப்பட்ட 5 செல்போன்கள், வைஃபை மோடம், பீடி, குட்கா பார்சலை பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம் அடுத்த தண்டலத்தைச் சேர்ந்தவர் சுமதி 45 இவர் கட்டிட தொழிலாளி. இன்று மதியம் சித்தேரி பஸ் ஸ்டாப் அருகில் ஓரமாக நடந்து சென்றார் அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த லாரி சுமதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது சகோதரியான பிரியா குடும்பத்துடன் அருகில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று செல்வம் வளர்க்கும் நாய் பிரியாவின் வீட்டிற்குள் சென்றதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில், இது குறித்து இரு குடும்பத்தைச் சேர்ந்த 11பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி அருகே உள்ள அரியாம்பாளையம் பகுதியில் +1 படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது . தேர்வு நடைபெறும் நிலையில், படிப்பில் மகள் கவன குறைவாக இருப்பதாக கூறி தாய் கண்டித்ததால் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி மகாராஜபுரம் பகுதியில் வீடுகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் இன்று செய்யப்பட்டது. தொடர்ந்து நிர்வாகிகள் இரட்டை இலை சின்னம் மற்றும் வேட்பாளரின் பெயரை சுவரில் வரைந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இன்று
காரிமங்கலம் அருகே காட்டுசீகல அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கெரகோட அள்ளியை சேர்ந்த ஞானசேகர் (43) நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தி.நகர் மேட்லி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 29-ம் தேதி வேளச்சேரியில் உள்ள இடத்தை விற்பது தொடர்பாக ஒருவரைச் சந்திக்க வேளச்சேரி காந்தி ரோடு செல்வா நகருக்குச் சென்றார். அப்போது மூன்று பைக்கில் வந்த மர்ம கும்பல், பழனிச்சாமியை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில் 2024 மக்களவை தேர்தலையொட்டி இந்தியன் வங்கி சார்பில் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ராட்சச பலூனை பறக்கவிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (30.03.2024) விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் உடன் இருந்தார்.
கரூரில் அதிமுக வேட்பாளரை அழைத்து வராமல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் தாம்பூல தட்டுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பெண்களுக்கு, தலா 50 ரூபாயை அதிமுகவினர் வழங்கினர். நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் 50 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அதிமுகவினரிடம் பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.