Tamilnadu

News March 30, 2024

ராமநாதபுரம்: கோயிலில் வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்

image

ராமநாதபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள், அதிமுக நிர்வாகிகளுடன் ரெகுநாதபுரம் வல்லபாய் ஐயப்பன் திருக்கோயிலில் இன்று வழிபாடு செய்த பின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கான பிரச்சார பயணத்தை கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து துவங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

News March 30, 2024

வேலூர்: 5 வேட்பாளர்கள் வாபஸ்!

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 30) மதியம் 1 மணி வரை 5 வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

நெல்லை களத்தில் 23 வேட்பாளர்கள்!

image

நெல்லை மக்களவை தொகுதியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், அதிமுக மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் ஆகியவற்றின் வேட்பாளர்கள் 5 பேர், 18 சுயேச்சைகள் என 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று 3 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

News March 30, 2024

திருப்பூர்: விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டிய கலெக்டர்

image

திருப்பூர் மக்களவை தொகுதியில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(மார்ச் 30) திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் தவறாமல் அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேருந்துகளில் ஒட்டினார்.

News March 30, 2024

கூடலூர்: ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம் கூடலுர் SS நகர் பகுதியை சேர்ந்த மணி என்ற இளைஞர், பாண்டியார் குண்டமுலா ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக அக்கபக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

திருப்பூரில் மூன்று லட்சத்தில் 100 ரூபாய் பறிமுதல்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதி வாலிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த பிரபு என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த மூன்று லட்சத்து 100 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News March 30, 2024

கிருஷ்ணகிரி: முதல்வரை சந்தித்த செயலாளர்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேற்று தருமபுரி மாவட்டத்தில் வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபிநாத் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர். இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

திருச்சி: IIM இல் 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

image

திருச்சியில் உள்ள பிரபலமான இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் எனப்படும் கல்வி நிறுவனத்தில் இன்று 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிறுவன முதல்வர் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவை சிறப்பிக்கும் விதமாக இந்நிறுவனத்தின் பயின்ற மாஜி மாணவர்களும் பங்கேற்றனர்.

News March 30, 2024

சிவகாசி அருகே தாய் மகள் தற்கொலை!

image

அம்மாபட்டி வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன்- பாப்புக்குட்டி தம்பதியினர். இவர்களது 2வது மகள்  8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.இதை தாய் கண்டித்ததால் மன உளைச்சலில் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட தாய் பாப்புக்குட்டியும் அவருக்கு அருகிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 30, 2024

திருச்சி சாலை பணிகளை துரிதப்படுத்த உத்தரவு

image

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 4, வார்டு 60, அம்மன் நகர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெறும் பணிகளின் நிலை குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

error: Content is protected !!