India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூக நீதி, சம நீதி என பேசும் திமுக அவர்களது குடும்பத்தை வளர்ப்பது, அவர்களது பிள்ளைகளை எம்.பி., எம்.எல்.ஏ. ஆக்குவது, அவர்களது உறவினர்களை அமைச்சர் ஆக்குவது, இது தான் அவர்களின் சமூக நீதி எனவும், திமுகவினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டப்படுவதால் பயந்து பயந்து பிரசாரம் மேற்கொள்கின்றனர் என அண்ணாமலை இன்று பேசினார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு பரிசீலனை முடிவில் 21 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டு இன்று மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று யாருமே வேட்புமனுவை வாபஸ் பெறாததால் அதே 21 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மாரியம்மாள். இவரின் ஒன்றரை வயது மகள் ஹரிமித்ரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் உள்ள வாளியில் தலைக்குப்புற கிடந்துள்ளார். உடனடியாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அம்பத்தூர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 13 வேட்பாளர் தேர்வு செய்தனர் அதில் 2 வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது 11 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு, அதில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் உடன் திமுக, அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட 5 பிரதான கட்சிகள் போட்டியிடுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், மக்களவை தேர்தலில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையம் மூலம் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2,000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தகுந்த ஆவணத்துடன் பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கப்பட்டது.
மக்களவை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தை இன்று (30-3-2024) மேற்கொண்டார். புதுச்சேரி உப்பளம் சாலை, புதிய துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்டு புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் இன்று காய்கறிகள் மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கலெக்டர் அருண்தம்புராஜ், கோட்டாட்சியர் அபிநயா, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டனர்.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இன்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் , மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது.
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் ஏலகிரி மலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
Sorry, no posts matched your criteria.