Tamilnadu

News January 7, 2026

விழுப்புரம்:இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <>விண்ணபிக்க <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

சென்னை: பேருந்து நிலையத்தில் பாலியல் தொல்லை!

image

ஜார்கண்ட்டைச் சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35). இவர் கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துக்கு காத்திருந்த பெண்ணுக்கு நேற்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் கூச்சலிட, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் புரமோத் யாதவ் கைது செய்யப்பட்டார்.

News January 7, 2026

அரியலூர் தேமுதிக மாவட்ட செயலாளர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் பாசாரில் ஜன.9 அன்று நடைபெற இருக்கின்ற மக்கள் உரிமை மீட்பு மாநாட்டின் திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் மாநாட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று(ஜன.7) தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் ஜெயவேல் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித், மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநாட்டின் பணிகளை குறித்து கேட்டறிந்தனர்.

News January 7, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.00- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.80- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை குறைந்துள்ளதால், முட்டை விலை தொடர்ந்து சரிந்தது.

News January 7, 2026

புதுச்சேரி இஷா சிங்கின் உருக்கமான பதிவு

image

புதுச்சேரி மக்கள் அன்பானவர்கள், அவர்களை மிஸ் செய்கிறேன் என இஷா சிங் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஒழுங்குபடுத்திய இஷா சிங், சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் இஷா சிங் கடந்த 4ஆம் தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

News January 7, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை கலக்டர்!

image

திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ம் தேதி பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கவுரவிக்கும் வகையில், முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. 2026-ம் ஆண்டிற்கான விருது பெறுவதற்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ராணிப்பேட்டை சேர்ந்த திருநங்கைகள் பதிவு செய்யலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News January 7, 2026

கடலூரில்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், இன்று(ஜன.7) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க காவல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

News January 7, 2026

கடலூர் மாவட்டத்தில் குறைதீர் முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் வருகிற ஜன.10ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 7, 2026

கொடைக்கானல் அருகே திருமணத்தை மீறிய உறவால் கொலை

image

கொடைக்கானலை குறிஞ்சிநகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பரமேஷ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பரமேஷ்வரியின் மகன் மனோஜ்குமார் (23)கண்டித்துள்ளர். மேலும் இருவருக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டு மனோஜ்குமார் கோபாலகிருஷ்ணணை இரும்பு கம்பியால் தாக்கியதால் இறந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News January 7, 2026

FLASH: திருப்பத்தூர்: கிணற்றில் தொங்கிய ஆண் சடலம்!

image

வாணியம்பாடி அடுத்த கொங்கன் வட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனடிப்படையில் வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு, தற்கொலையா? கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!