Tamilnadu

News March 30, 2024

வேட்புமனுவை திரும்பப்பெற்ற வேட்பாளர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 17 பேர் மனு நிராகரிக்கப்பட்டது. மீதம் உள்ள 18 நபர்கள் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில்
இன்று மதியம் 1:10 மணி வரை செங்கனன் , மகேந்திர சேகர், வெங்கடேசன் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். தற்போது மீதம் 15 மனுக்கள் மட்டுமே உள்ளன.

News March 30, 2024

திண்டுக்கல்: தேர்தல் கட்டுப்பாடு பதிவேடுகள் ஆய்வு

image

2024 மக்களவை தேர்தலையொட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோந்தே விஷால்தஷ்ரத் பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். உடன் திண்டுக்கல்  தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி இருந்தனர்.

News March 30, 2024

ஈரோடு: நாளை முதல்வர் வருகை

image

ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். முதல்வர் வருகையால் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் வருவர், எனவே திமுக நிர்வாகிகள் தொண்டர்களின் வசதிக்காக கூட்டத்திற்கு வருவதற்குரிய வழித்தடத்தையும் தூரம் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

News March 30, 2024

பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா 

image

பெரியகுளம் தென்கரை நூற்றாண்டு கிளை நூலகத்தில் வாசகர் வட்டாரத்தின் சார்பாக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளை இன்று கல்வி சுற்றுலாவாக மதுரை மாவட்டம் கீழவடி அகழாய்வு மையத்திற்கு, அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வில் வாசகர் வட்டார தலைவர் அன்புக்கரசன், மணி கார்த்திக் மற்றும் நூலகர்கள் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

கோவை ரயில் பகுதியாக ரத்து

image

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக நாகர்கோவில் – கோவை ரயில் மார்.30, 31, ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் கோவை- நாகை ரயில் மார்.30, 31, ஏப்.1ஆம் தேதிகளில் நெல்லை – நாகை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

விழுப்புரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் முன்னாள் அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கருவேப்பிலைபாளையம் ஊராட்சியில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜ்-க்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். உடன் அதிமுக திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், தேமுதிக ஒன்றிய செயலாளர், அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இருந்தனர்.

News March 30, 2024

திருச்சியில் எம்எல்ஏ விமர்சனம்!

image

வருமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் விதித்து இருக்கிறது. வருமானவரித்துறை இது குறித்து திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இச்செயலை கண்டித்து காங்கிரஸ், போராட்ட களத்திலும் இறங்கி இருக்கிறது. இதனால் தேர்தல் வரும் முன்பே எதிரியின் முதுகெலும்பை உடைத்துக் களம் காண்பது கோழைத்தனம் என்று
விமர்சித்துள்ளார்.

News March 30, 2024

தென்காசியில் இலவச நீட் பயிற்சி அறிமுக வகுப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (30/03/24) வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் ”ஆற்றுப்படை அறக்கட்டளை” இணைந்து நடத்தும் இலவச நீட் பயிற்சி அறிமுக வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை தென்காசி பாஜக பாராளுமன்ற பொறுப்பாளர் ஆனந்தன் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

News March 30, 2024

மோட்டார் வாகன விதி மீறல் 236 வழக்குகள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 29ம் தேதி நடந்த அதிரடி சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என தெரிவித்தனர்.

News March 30, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணியிலிருந்து மருத்துவ சிகிச்சை காரணமாக விலக்கு கோரி மனு வழங்கியவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!