Tamilnadu

News March 30, 2024

வேலூர் : ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த  சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா , ப்ரீத்தி ஆகிய 4 பேர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

சிவகங்கை: cVIGIL இணையதளத்தில் புகார்கள் தெரிவிக்கலாம்

image

சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே c VIGIL என்ற இணையதள வாயிலாக தேர்தல் தொடர்பான புகார், தகவல் தெரிவிப்பதன் அடிப்படையில் ,  குறிப்பிட்ட இடத்திற்கு பறக்கும் படை அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

புதுவை: இறுதி வேட்பாளர் பட்டியல்

image

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் 19 சுயேட்சைகள் என 26 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வேட்பாளர் பட்டியலை புதுச்சேரி தேர்தல் நடந்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இன்று அறிவித்துள்ளார்.

News March 30, 2024

சமூக நீதி, சம நீதி என திமுக பேசுவதாக அண்ணாமலை காட்டம்

image

சமூக நீதி, சம நீதி என பேசும் திமுக அவர்களது குடும்பத்தை வளர்ப்பது, அவர்களது பிள்ளைகளை எம்.பி., எம்.எல்.ஏ. ஆக்குவது, அவர்களது உறவினர்களை அமைச்சர் ஆக்குவது, இது தான் அவர்களின் சமூக நீதி எனவும், திமுகவினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டப்படுவதால் பயந்து பயந்து பிரசாரம் மேற்கொள்கின்றனர் என அண்ணாமலை இன்று பேசினார்.

News March 30, 2024

மதுரையில் களம் காணும் 21 வேட்பாளர்கள்!

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு பரிசீலனை முடிவில் 21 வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டு இன்று மனுவை வாபஸ் பெறுவதற்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று யாருமே வேட்புமனுவை வாபஸ் பெறாததால் அதே 21 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

கரூர்: தண்ணீர் வாளியில் சிறுமி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி மாரியம்மாள். இவரின் ஒன்றரை வயது மகள் ஹரிமித்ரா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் உள்ள வாளியில் தலைக்குப்புற கிடந்துள்ளார். உடனடியாக மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

News March 30, 2024

இரண்டு போட்டியாளர்கள் வேட்பு மனு வாபஸ்

image

காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அம்பத்தூர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 13 வேட்பாளர் தேர்வு செய்தனர் அதில் 2 வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது 11 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு, அதில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் உடன் திமுக, அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட 5 பிரதான கட்சிகள் போட்டியிடுகிறது.

News March 30, 2024

ஈரோடு: 2000 பேருக்கும் தபால் வாக்கு

image

ஈரோடு மாவட்டத்தில், மக்களவை தேர்தலில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையம் மூலம் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2,000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தகுந்த ஆவணத்துடன் பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கப்பட்டது.

News March 30, 2024

புதுச்சேரிக்கு மாற்றம் தேவை எடப்பாடி பழனிசாமி பேச்சு

image

மக்களவை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தை இன்று (30-3-2024) மேற்கொண்டார். புதுச்சேரி உப்பளம் சாலை, புதிய துறைமுகம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கலந்து கொண்டு புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். புதுச்சேரி மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறினார்.

News March 30, 2024

கடலூரில் காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு

image

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் இன்று காய்கறிகள் மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கலெக்டர் அருண்தம்புராஜ், கோட்டாட்சியர் அபிநயா, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டனர்.

error: Content is protected !!