India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்சம் 16 பட்டன்கள் மட்டுமே உள்ளன. திருநெல்வேலியில் மக்களவைத் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் நிலை உருவாகி உள்ளது. தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தினர் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட 26 பேர் மனு தாக்கல் செய்தனர். இதன் பரிசீலனையில் 18 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணி வரை 3 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது. நோட்டா சின்னத்தையும் சோ்த்துக் கொண்டால் மொத்தம் 16 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி கிழவன் குளம் கண்மாயில் மீன் பிடி திருவிழா இன்று (மார்.31) நடைபெற்றது. இதில் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வலை, ஊத்தா போன்ற மீன்பிடி சாதனங்களுடன் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இதில் கட்லா, விரால், ஜிலேபி, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை அரை கிலோ முதல் 7 கிலோ வரை எடை கொண்ட மீன்களை அள்ளிச்சென்றனர் .
காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் மற்றும் அரசியல் கட்சியினா் 5 போ் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா். க.செல்வம்-திமுக(உதயசூரியன்), பெரும்பாக்கம் இ.ராஜசேகா்-அதிமுக (இரட்டை இலை), வெ.ஜோதி வெங்கடேசன்-பாமக (மாம்பழம்), வி.சந்தோஷ்குமாா்-நாம் தமிழா் (மைக்), எஸ்.இளையராஜா-பகுஜன் சமாஜ் (யானை) மேற்கண்ட இவர்கள் அவர்களுடைய சின்னத்தில் போட்டியிடுகின்றனர்
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் எடப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2018 பேர் அதிகமாக உள்ளனர். 8,23,336 ஆண் வாக்காளர்களும், 8,25,354 பெண் வாக்காளர்களும், 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளனர்.
அரக்கோணம் அடுத்த கைனூர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் இன்று நடந்தது. ஊர் நாட்டாண்மைதாரர் நாதமுனி, நிர்வாகிகள் ஆறுமுகம் ,மூர்த்தி, வழக்கறிஞர் தினேஷ் ,மணி, குப்புசாமி ,கோதண்டன் ,அன்பு, குப்பன் ,முரளி முனிரத்தினம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .
இன்று ஈரோட்டில் நாமக்கல் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றாா். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன், நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்ததிற்க்கு ஆதரவு திரட்டுவதற்காக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சை வந்தார். அப்போது அவர் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரை சந்தித்து பேசினார். அண்ணாமலைக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என இருவரும் கூறினர்.
நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்தவர் ரஞ்சித் (30). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (30) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரஞ்சித்திடம் ரூ.500-யை பறித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நேற்று நிஷாந்தை போலீசார் கைது செய்தனர்.
ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென்சென்னையில் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள். தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகியவற்றை இணைக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.