Tamilnadu

News March 25, 2024

கிருஷ்ணகிரி: தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு

image

கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து 20 நாள்களில் மறு எண்ணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

News March 25, 2024

விருதுநகர்: சரத்குமார் கலகலப்பு பேட்டி

image

ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.உடன் சரத் குமாரும் பிரச்சாரம் செய்து வருகிறதா.சரத் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் சூர்யவம்சம் படத்தில் எப்படி நான் படிக்காமல் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ,அது போல் ராதிகாவை வெற்றி பெற வைப்பேன் என்கிறார்.மேலும் மக்களுக்கு உண்மையாக உழைப்போம் என்றார்.

News March 25, 2024

திருச்சி அருகே விபத்து;சம்பவ இடத்தில் மரணம்

image

திருச்சி ரயில்வே மேம்பாலம் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதையறிந்த திருச்சி ரயில்வே போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தவர் மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்த கார்த்தி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.

News March 25, 2024

புதுக்கோட்டை அருகே பயங்கர தீ விபத்து; நாசம் 

image

அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள கடையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள பட்டாசுக்கடையில்   பிடித்த தீ அருகில் உள்ள நகைக்கடை, பாத்திரக்கடையில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 25, 2024

கடலில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் பலி

image

கடலூர் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் கலையரசன் மகன் தினகரன் (17). பிளஸ்-2 மாணவரான இவர் தற்போது நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதி உள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச் 24) தனது நண்பர்களுடன் நல்லவாடு கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி பலியானார். இதுதொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

News March 25, 2024

திருவண்ணாமலை: பள்ளி பேருந்து விபத்து

image

திருவண்ணாமலை அவலூர்பேட்டை திண்டிவனம் புறவழிச்சாலையில் இன்று காலை தனியார் பள்ளி பேருந்து மற்றும் சரக்கு லாரி கார் ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி பேருந்தின் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

திண்டுக்கல்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே உள்ள CKCM நகர் பகுதியில் நேற்று வீரா கௌதம் என்ற இளைஞரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த வீரா கௌதம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

News March 25, 2024

தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, வேலூர் எம்பி தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த், பாஜகவின் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் பசுபதி உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்

image

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பேராசியர் ராம சீனிவாசன், பூங்கா முருகன் கோவிலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சங்கீதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் மாநகர மாவட்ட தலைவர் மகா சுசீந்திரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!