India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருதமலை கோயிலில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது. அதில், டிக்கெட் விற்பனை எழுத்தாளர் (1 பணியிடம்), அலுவலக உதவியாளர் (2), ஓட்டுநர் (5), பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர் (1), காவலர் (4), திருவலகு (2), விடுதி காப்பாளர் (1), பல வேலை (1), மினி பஸ் கிளீனர் (1) என 19 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற இலச்சினை வரைபட வடிவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.
புதுக்கோட்டை நகராட்சி அடப்பன் வயல் பகுதியில் திருச்சி எம்பி தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, வட்டாட்சியர் பரணி, ஆணையர் ஷியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி காளிதாசன் நகரில் இன்று காலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. இதில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தலை முன்னிட்டு, தி.மலை மாவட்டத்தில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்த்தி தவறாமல் வாக்களிக்க முதல் முறை வாக்காளர்களுக்கு சிறப்பு அழைப்பு மையம் இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்ட காந்தி நகரில் தனியார் கல்வி நிறுவன பங்குதாரரும், பேருந்து உரிமையாளருமான சந்திரசேகர் வீட்டில் ஐடி சோதனை இன்று 03.04.2024 நடைபெற்று வருகிறது. தேர்தl சமயம் என்பதால் இவரது வீட்டில் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதா ? என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தென்னக ரயில்வே சேலம் கோட்டம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லையில் இருந்து ஞாயிறன்று இரவு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை திங்களன்று மேட்டுப்பாளையம் சென்றடையும். அதேபோல் திங்களன்று இரவு புறப்பட்டு மறுநாள் செவ்வாயன்று நெல்லையை சென்றடையும். இந்த சிறப்பு வாராந்திர ரயில் வரும் மே.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், இன்று இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம் 1, வார்டு 15, சஞ்சீவி நகரில் சமுதாய கூடத்தில், மாநகராட்சி ஆணையர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு சுகாதாரம் குறித்து ஆய்வு செய்த ஆணையர் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தேவதானம் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 100.04 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருக்கிறது. இதன் அளவு டிகிரி செல்சியஸில் 38 டிகிரி செல்சியஸ் ஆகும். சுட்டெரித்த வெயிலின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் மக்கள் வெயிலில் செல்ல தயங்குகின்றனர்.
Sorry, no posts matched your criteria.