India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் மொத்தம் 126 தோ்வு மையங்களில் 12,617 மாணவா்கள், 11,911 மாணவிகள் என மொத்தமாக 24,528 போ் தோ்வு எழுதினா். முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மொத்தம் 2021 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை ரத்துசெய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் நடை முறைப்படுத்த வலியுறுத்தி மதுரையை சேர்ந்த பெண் வக்கீல் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். சகோதரிகளான இருவரும் பலவேறு சமூகப் பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று (மார்ச் 27) செய்தியாளரிடம் கூறும்போது, இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும். நான் வெற்றிபெறும் பட்சத்தில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக நெல்லை தொகுதியை மாற்றிக் காட்டுவேன், ஒரு சட்டசபை தொகுதிக்கு மட்டும் செய்துவந்த மக்கள் பணி ஆறு தொகுதிகளுக்கும் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி என்று கூறினார்.
நேரு யுவகேந்திரா தேசிய இளைஞர் சேவை அமைப்பின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி உறுதி ஏற்பு இளம் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நாமக்கல் ராசிபுரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பாவை கல்லூரி முதல்வர் தேசிய சேவை இளையோர் தொண்டர் ஷா முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு எடுத்து வரும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.2,09,46,060 பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.நேற்று மாலை சீர்காழி கடைவீதி கொள்ளிடம் முக்கூட்டு பழையபேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை கடையாக ஏறி இறங்கி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இரட்டை இலை அறையில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் குமாரி பாசி நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கியது. இந்த நிலையில் கடலூரில் இன்று வரை பா.ம.க – தங்கர்பச்சான், தேமுதிக – சிவக்கொழுந்து, நா.த.க – மணிவாசகன் , பகுஜன் சமாஜ் கட்சி – தணிகைசெல்வன் , சுயேட்சையாக ராசமோகன் , பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உட்பட 10 பேர் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேலை பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரப்பட்டது.
மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராம சீனிவாசன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அதில் அவரது சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் சொத்துக்கள் 2.48 கோடி உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் 1.02 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.