Tamilnadu

News April 5, 2024

நாமக்கல்: நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

image

மக்களவை 24 தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்ஜித் கவுர் அவர்கள் முன்னிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 5, 2024

திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் தற்போது வேலூர் மாவட்டத்தை விட திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வெப்ப நிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2024

கடலூர் மருத்துவமனையில் நிலவேம்பு கஷாயம் வழங்கல்

image

கடலூர், மஞ்சக்குப்பம், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனையில் காய்ச்சல் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட ‘நிலவேம்பு கஷாயம்’ பொதுமக்களுக்கு இன்று வழங்கப்பட்டது. மேலும் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2024

கடலூர்: என்எல்சி கண்டித்து கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சமனான இழப்பீடு, வேலை வழங்க கோரிக்கை விடுத்தனர். மேலும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 5, 2024

தேர்தல் முன்னிட்டு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு ஆர்.டி.ஓ சரவணன் தலைமையில் வழங்கப்பட்டது. அழைப்பிதழில் 100 சதவீதம் வாக்குபதிவை நடத்திட தங்கள் உரிமையை நிலை நாட்டிட அன்புடன் அழைக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அழைப்பிதழ் வழங்கும்போது வெற்றிலை, பாக்கு, பழம் உடன் தாம்பூல தட்டுடன் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.19 அன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

முதியோரிடம் வாக்கு சேகரிக்கும் தேதி அறிவிப்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 85 வயது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகள் வருகிற 6, 8 மற்றும் 10 ஆகிய செய்திகளில் இல்லங்களை தேடி நேரடியாக சென்று சேகரிக்கப்படும். இந்த நிகழ்வு வீடியோவில் பதிவு செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் இன்று (ஏப்ரல் 4) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

பெரம்பலூர் அருகே ரூ.80,000 பறிமுதல்

image

பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.80,000 பறிமுதல் செய்யப்பட்டது. அல்லிநகரம் அருகே வட்டாட்சியர் தேன்மொழி தலைமையிலான குழுவினர் நேற்று(ஏப்.4) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஷாபருல்லா என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.80,000 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அப்பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!