India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் வருவாய் கோட்டாச்சியர் இருந்தார்.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெறும் பொதுத்தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
அறந்தாங்கி: 42.74%
பரமக்குடி (தனி ): 42.14%
திருவாடனை : 40.50%
இராமநாதபுரம் : 36.39%
முதுகுளத்தூர் : 39.90%
திருச்சுழி : 46.25%
தொகுதி முழுவதும்
சராசரி : 40.90 % ஆகும்.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்றார். அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் பின் தொடர்ந்த போது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் வாக்களிக்காமல் முன்னாள் எம்பி ப.குமார் திரும்பி சென்றார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவி வந்தது.
ஈரோட்டில் இருந்து அந்தியூர் சொல்லுவதற்கு சுமார் 1.30 மணி நேரம் பேருந்துகள் இல்லாத காரணத்தால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஈரோட்டில் இருந்து 1.20 மணிக்கு இயக்கப்படும் அந்தியூர் வழியாக சத்தி வரை செல்லும் அரசு பேருந்தும் 1.50 மணிக்கு அந்தியூர் வழியாக கோவிலூர் செல்லும் அரசு பேருந்தும் 2.15 மணிக்கு பழனியில் இருந்து ஈரோடு வழியாக அந்தியூர் செல்லும் பேருந்தும் இயக்கப்படவில்லை.
மதுரை மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டியில் வரும் மே 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதலிடம் பெரும் அணிக்கு ரூ.1 லட்சமும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. எனவே பங்கேற்க ஆர்வமுள்ள அணிகள் வரும் மே 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தல்.
விருதுநகர் மாவட்ட பாராளுமன்றத் தொகுதி வாக்கு பதிவு ஒரு மணி நிலவரப்படி 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக விருதுநகர் தொகுதியில் 40.19% வாக்குகளும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 39.33% வாக்குகளும், திருமங்கலம் தொகுதியில் 41.70% வாக்குகளும், சாத்தூர் தொகுதியில் 44.32% வாக்குகளும், சிவகாசி தொகுதியில் 36.14% வாக்குகளும், அருப்புக்கோட்டை – தொகுதியில் 41.31% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த கோணாமேடு வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்கு அளித்தலும் தாமரைக்கு வாக்கு விழுவதாக விசிகவினர் புகார் தெரிவித்துள்ளனர். வாக்குபதிவு இயந்திரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வாக்காளர்கள் கோரிக்கை வைத்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 19) காலை சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். முன்னதாக வாக்காளர்களுடன் அவர் வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்ய சென்றார். அவருடன் மதிமுக செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி சென்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளேன்.
தேர்தலில் திமுக மற்றும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும் என்பதே தமிழ்நாடு வாக்காளர்களின் மன நிலையாக உள்ளது என்றார்.
தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது 1 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகப்பட்சமாக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 47.50 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும்,மாலை 6 மணிக்குள் 70-75 சதவிகித வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.