Tamilnadu

News April 20, 2024

திருவள்ளூர்: ஒரே போன் கால்… கைவிடப்பட்ட மறியல்

image

திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட மெய்யூரில் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை செய்திராத ஊராட்சியை கண்டித்து பொதுமக்கள் அரசுப்பேருந்தை வழிமறித்து வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தினால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் தொலைபேசி மூலம்பேசி சமரசம் செய்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

News April 20, 2024

ஜோலார்பேட்டையில் அதிக வாக்குப்பதிவு

image

திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், திருப்பத்தூர், கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகள் அடங்கும். திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் 73.88 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் ஜோலார்பேட்டை தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 76.15 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக திருவண்ணாமலையில் 70.09 சதவீதம் பதிவாகியுள்ளது.

News April 20, 2024

நீலகிரி: மீண்டும் யானை நடமாட்டம்

image

கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தை சுற்றி விவசாயிகள் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்துவருகிறார்கள். சமீபத்தில் யானைகள் தண்ணீர் தேடி இங்கு வந்தன. அதன்பின் யானை நடமாட்டம் தென்படவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் யானை ஒன்று நடமாடியது மக்களை அச்சமடைய செய்தது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

News April 20, 2024

நெல்லைப்பர் கோவிலில் அன்னதான பக்தர்களுக்கு வசதி

image

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அன்னதான கூடத்தில் அன்னதானத் திட்டத்திற்கு வருகை தரும் பயனாளிகள் வசதிக்காக நிழற்கூரையுடன் கூடிய வரிசை அமைப்பு மதுரை ஜேகே பின்னர் லிமிடெட் நிறுவனத்தினர் மூலம் உபயமாக இன்று (ஏப்.20) வழங்கப்பட்டது. இதில் திருக்கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் ஜே.கே.பென்னர் நிறுவன நிர்வாக மேலாளர் இக்னேஷியஸ் பங்கேற்றனர்.

News April 20, 2024

வைப்பறைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1745 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற நிறைவடைந்துள்ளது. ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வாக்கு என்னும் மையமான எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

தேனி தொகுதியில் 69.87% வாக்குப்பதிவு

image

தேனி மக்களவை தொகுதியில் நேற்று (ஏப்.19) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இறுதி நிலவரப்படி சோழவந்தான் 74.98%, உசிலம்பட்டி 70.95%, ஆண்டிபட்டி 70.82%, பெரியகுளம் 66.01%, போடிநாயக்கனூர் 71.06%, கம்பம் 66.60% என மொத்தமாக 69.87% வாக்குப்பதிவு நடை பெற்றதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 20, 2024

வாக்காளா் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்காளா்கள் ஏமாற்றம்

image

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள 172ம் எண் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்.19) வாக்களிக்க வந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் பெயா்கள் வாக்காளா்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்ததால், அவா்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் தோ்தல் அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

News April 20, 2024

தேர்தல் ரிசர்வ் ஆபிஸர்கள் திடீர் போராட்டம்

image

சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் தேர்தல் பணிக்காக தங்க வைக்கப்பட்ட ரிசர்வ் ஆபீசர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு டீ காபி மற்றும் உணவு தரவில்லை எனவும் – தேர்தல் பணிக்கு வந்த தங்களுக்கு சம்பளம் வழங்கப்பட முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறி இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

News April 20, 2024

தஞ்சை: 8 கி.மீ. பயணித்த வாக்காளர்கள்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, தஞ்சை மாவட்டம் காவிரி கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் நேற்று(ஏப்.19) தங்களது ஓட்டுகளை பதிவு செய்வதற்காக வாகனங்களில் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். காவிரி படுகை கிராமத்தில் இருந்து திருகாட்டுப்பள்ளி வந்து, பின்னர் திருவையாறு சாலையில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

News April 20, 2024

வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

image

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விடுமுறையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு – சூரம்பட்டி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஈரோடு தெற்கு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. எனவே போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குப்புசாமி (63) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!