India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் விபத்தினால் கண்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி சுரேஷ்குமார் என்பவருக்கு ரூ.2 லட்சம் நிவாரன தொகையும்
மற்றும் இயற்கை மரணம் எய்திய மாற்றுத்திறனாளி வாரிசுகளுக்கு ரூ.17000 வீதம் நான்கு மாற்றுத்திறனாளிகளிக்கு ரூ.85000 தொகைக்கான காசோலைகளை இன்று ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரன் அமர்வு விசாரிக்க உள்ளனர். கல்வராயன் மலை பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு தலையிட்டோம் எனக்கூறிய நீதிமன்றம் சேலம், கள்ளக்குறிச்சி கலெக்டர்கள், எஸ்பிக்கள் மற்றும் தலைமைச்செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ள மூன்று புதிய சட்டங்களின் அறிமுக விழா புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, மூன்று சட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினாா். அப்போது அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்களால் மக்கள் அச்சமின்றி வாழ்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இன்று மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திருத்தம் செய்ததை உடனே நிறுத்தி வைத்திக் கோரியும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), இந்திய சாட்சிய சட்டம் (IEA) முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை வடமொழி தலைப்புகளில் மாற்றியதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று(ஜூலை 1) மதியம் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத. இதனால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நாளை முதல் 6ஆம் தேதி வரை ஒரு சில தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.
திருச்சி, முக்கொம்பு கதவணை சரி செய்யும் பணி பொதுப்பணி துறை மூலம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பிரதான கிணறுகளில் நீரூற்று குறைந்ததால், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கிய அளவு குடிநீர் ஏற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் இன்றும் நாளையும் (ஜூலை 1, 2) மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டதில் வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று(ஜூலை 1) சத்துவாச்சாரி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மண்டலக்குழுத் தலைவர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.