India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பறவைக்காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்வது குறித்து கலெக்டர் உமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் சுகாதார அலுவலகம் மற்றும் கோழி பணியாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சலுக்கு இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் கோழி மட்டும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வலியுறுத்தப்பட்டன.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக புவி தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகிக்க புவி வடிவில் மனித சங்கிலி அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாணவ மாணவியரும் மனிதன் வாழ தகுந்த இந்த புவியை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றும், மண்வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முருகனின் ஆதிபடை வீடான நாகை மாவட்டம் எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாகை மட்டுமின்றி திருவாரூர் மயிலாடுதுறை காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு மின்னனு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று ஏப்ரல் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அவர்கள் சிசிடிவி காட்சி மற்றும் பாதுகாப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர் மாவட்டம் படியூர் கிராமத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 26 குடும்பங்கள் வீட்டுமனைகளை வாங்கி வசித்து வருகின்றனர். கடந்த 4 வருடங்களாக தவணைத் தொகை செலுத்தி வரக்கூடிய நிலையில், சாலை வசதி தண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும், அடிப்படை வசதிகளை செய்து தர ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் கூவாகத்தில் குவிந்துள்ளனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடமிருந்து ரூ.4 கோடி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் 28.51 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க சுயேச்சை வேட்பாளர் ராகவன் வழக்கு தொடுத்திருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்.22) அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் 126வது மலர் காட்சி முன்னிட்டு சிறந்த பூங்காக்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவு படிவங்கள் பூங்கா அலுவலகத்தில் 24ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூங்கா உரிமையாளர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 27ஆம் தேதிக்குள் பூங்கா பதிவு ஒன்றுக்கு ரூ.100 கட்டணத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.அதன்படி இன்று காலை 6.10 மணியில் இருந்து 6.20 மணி வரைக்கும் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்தது!
வத்திராயிருப்பு அருகே மேல கோட்டையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுப்பிரமணியன்.
இவரது அக்காவை ஜெயராம் என்பவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்,ஜெயராம் தனது மனைவியை சேர்த்து வைக்க கோரி ஞானசுப்ரமணியனிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். வத்திராயிருப்பு போலீசா நேற்று வழக்குப் பதிந்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.