Tamilnadu

News April 24, 2024

சென்னையில் ரூ.190 கோடி வரி வசூல்!

image

சென்னை மாநகராட்சியில் இம்மாதம் 20ம் தேதி வரை ரூ.190 கோடி சொத்துவரி வசூலாகியுள்ளது. மேலும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது. அதன்படி 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வரி செலுத்தி 5 சதவீத தள்ளுபடியை பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் சொத்துவரி நிலுவை இல்லாத சொத்து உரிமையாளர்களாக உள்ளனர்.

News April 24, 2024

வாக்குப்பெட்டி அறையை ஆய்வு செய்த கலெக்டர்

image

2024 மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணப்படும் தருமபுரி செட்டிகரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று 22.04.2024 கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பதை பார்வையிட்டார்.

News April 24, 2024

நாளை கள்ளழகர் திருவிழா – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

“மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிக்கிறது. விஐபிக்களுக்கு வழங்கப்பட்ட 2400 பாஸில், ஒரு பாஸ்க்கு ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும், மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் ” என மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

விருதுநகர்: 49 மது பாட்டில்கள் பறிமுதல்

image

விருதுநகர் சிவகாசி சாலையில் இன்று ஆமத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, தனியார் உணவகம் அருகே அனுமதி இன்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குமாரலிங்கபுரம் பகுதியைச் சார்ந்த சந்திரன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 24, 2024

விருதுநகர் அருகே சுகாதார சீர்கேடு

image

ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரம் செல்லும் சாலையில் குடியிருப்பு அருகே குப்பைகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு அப்பகுதியினர் குப்பைகளை கொட்டுகின்றனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குப்பைகளை அள்ளப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

News April 24, 2024

திருச்சியில் தொற்று அபாயம்

image

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு மேல கிருஷ்ணன் கோவில் தெருவில் , குடிநீர் குழாய் தொட்டி அருகே பொது சாக்கடை உள்ளது. அதில் சாக்கடை நீர் தேங்கி அதிலிருந்து கழிவு நீர் வெளியேறி குடிநீர் குழாயில் கலந்து சாக்கடை நீருடன் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 24, 2024

தென்காசியில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11 மணிக்கு இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் பயன்பெறலாம் என தெரிவித்தார்.

News April 24, 2024

மதுரையில் இன்று முதல் துவக்கம்

image

மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை <>https://rte.tnschools.gov.in/<<>> என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதில், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

News April 24, 2024

புதுகை: முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

image

புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு அலங்கார முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஏராளமான பெண்கள் ஆரத்தி குடங்களுடன் செல்ல அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

News April 24, 2024

வேலூர் அருகே எம்எல்ஏ பங்கேற்பு

image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன், தனியார் புதிய கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய கடை திறந்து வைத்தார். இதில் குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் சௌந்தர் ராஜன் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சத்யானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!