Tamilnadu

News June 28, 2024

வார்னிங் கொடுத்த திருச்சி கமிஷனர்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இரவு காவல் பணியில் அசால்ட்டாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 88 பேருக்கு வார்னிங் மெமோ கொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாகும். இனியும் அலட்சியமாக இருந்தால் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

News June 28, 2024

ரூ.50,000 பரிசு, தங்கப்பதக்கம்: கலெக்டர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 28) விடுத்துள்ள அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு வரும் சுதந்திர தின விழாவில் ரொக்க பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடை உள்ள தங்க பதக்கம் மற்றும் 50,000 ரொக்கப் பரிசு சான்றிதழ் வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News June 28, 2024

பத்ம விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்முக திறமை உள்ளவர்களுக்கு குடியரசு தினத்தன்று பத்ம விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுக்கு தகுதியுடைய நபர்கள்  https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஜூலை 21ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

News June 28, 2024

விவசாயிகள் பயிர் காப்பீடு வழங்க பட உள்ளது

image

தமிழ்நாடு வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள்சாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2024 ஆம் ஆண்டு காரிபருவத்திற்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் பொது இ-சேவை மையங்களில் பீரிமியத் தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

மீனாட்சி அம்மன் கோவிலில் முளைக்கொட்டுத் திருவிழா

image

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வரும் 05.08.2024 முதல் 14.08.2024 வரை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மீனாட்சியம்மன் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும். 7 ஆம் நாளான 11.08.2024 அன்று வீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்ததியில் அம்மன் மற்றும் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

News June 28, 2024

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க,  பழத்தோட்டங்களில் பசுந்தீவன பயிரை ஊடுபயிராக பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 50 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏக்கருக்கு 3000 வீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதற்று, தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவுள்ளதாக தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யபடவுள்ளது. இதன்படி, மல்லல் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

News June 28, 2024

ஆணவ கொலை-இளைஞர் உடல் ஒப்படைப்பு

image

அருப்புக்கோட்டையை சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் நேற்று முன்தினம் காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த நபர்கள் அனைவரையும் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இன்று 3 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 6 பேர் மீது வழக்கு பதிந்து வன்கொடுமை தடுப்பு வழக்காக போலீசார் மாற்றம் செய்ததையடுத்து உடலை பெற்றனர்

News June 28, 2024

தஞ்சை மாணவர்களின் கவனத்திற்கு

image

தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அரசால் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை கொண்டாடும் வகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 6 – 12 ஆம் வரை உள்ள மாணாக்கர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி வரும் ஜூலை 9ஆம் தேதி மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டியில் மாணாக்கர்கள் பங்கேற்று பரிசுகளையும் சான்றிதழையும் வெல்ல கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

News June 28, 2024

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க ஒரு வாய்ப்பு 

image

பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள் ஏதவாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் 29.7.24 முதல் 3.8.24 வரையிலான வாரத்தில் நடைபெறவுள்ளது. வழக்காடிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!