Tamilnadu

News April 24, 2024

அதிகாலையில் இருவருக்கு கத்தி குத்து : ஒருவர் பலி

image

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெறும் ஆழ்வார்புரம் பகுதியில் இரு இளைஞர்கள் மீது 5பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திருப்பாச்சியை சேர்ந்த 26 வயது வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மதுரை மதிச்சியம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

விருதுநகர்:தேர்தல் நாளில் 117 அலுவலர்கள் ஆப்செண்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அலுவலர்கள் ஆப்சென்ட் ஆகினர் . விருதுநகர் மாவட்டத்தில் 9243 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஓட்டு சாவடி தலைமை அலுவலர் 1, அலுவலர் 2, 3 என்ற பணி நிலைகளில் நியமிக்கப்பட்டனர். 7206 பணியிடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் கூடுதலாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் 117 அலுவலர்கள் வரை பல்வேறு நிலைகளில் ஆப்சென்ட் ஆகினர்.

News April 24, 2024

நாமக்கல்:5% சிறப்பு சலுகை

image

நாமக்கல் நகராட்சிக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரித்தொகையை ஏப்ரல்  30-க்குள் செலுத்துவோருக்கு ஐந்து சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இணையதளம் வாயிலாக சொத்து வரியை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை

image

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த, ஜெயஸ்ரீ திருச்சியில் உள்ள கல்லூரியில் 1 ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கிஷோரை காதலித்து வந்துள்ளார், கிஷோர் மீது பல வழக்குகள் உள்ளன. நேற்று, நண்பர் வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு ஜெயஸ்ரீ மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News April 24, 2024

வாக்களிக்க வந்தவர்கள் திரும்ப முடியாமல் கடும் அவதி

image

மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க பெங்களூருவிலிருந்து தமிழகத்திலுள்ள சொந்த ஊருக்கு வந்தவர்கள் கடந்த 3 நாளாக போதுமான பஸ்கள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். தர்மபுரியில் பஸ்கள் நிரம்பிவிடுவதால் பாலக்கோடு, ஜிட்டாண்டஅள்ளி, ராயக்கோட்டை போன்ற பஸ் நிறுத்தங்களில் நிறைய பயணிகள் காத்து நிற்கின்றனர். எனவே தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர் போன்ற டிப்போக்களிலிருந்து கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு கூட்டம்

image

குற்றாலத்தில் நேற்று நடைபெற்ற ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகி எம்.பி. முகைதீன், தலைமையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஒவ்வொரு வருடமும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News April 24, 2024

புதுக்கோட்டை:சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் அறிவிப்பு!

image

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்-2024’ பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 10 பிரிவுகளில் நூல்கள் பெறப்பட்டு, விருதுபெறும் படைப்புகள் மற்றும் படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் விருதுப்பட்டியலை அருண் சின்னப்பா வெளியிட எழுத்தாளர் நா.முத்துநிலவன் பெற்றுக்கொண்டார். இதில் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 24, 2024

சேலம்: சிறுமியிடம் சில்மிஷம் செய்த 65 வயது முதியவர்

image

சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(65). இவர் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து தெரியவந்ததும் சிறுமியின் தாய் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

News April 24, 2024

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தேரோட்டம்

image

பேராவூரணி பகுதியில் உள்ள நீலகண்ட பிள்ளையார் கோயிலில் சித்திரைத் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று(ஏப்.22)  நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன், முருகன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News April 24, 2024

மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

image

புதுவை லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என். சி. சி.) மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் 225 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடைபெற்றது. முகாமில் பங்கேற்றுள்ள என்.சி.சி., மாணவர்கள் ஆர்வமுடன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!