India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள், கடன் விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று(ஜூன் 28) தெரிவித்ததாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022, 2023 ஆகிய 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை அதிக மழைப் பொழிவை தந்துள்ளது. இதையடுத்து விவசாய வசதிக்காக பல்வேறு பாசன கால்வாய்களில், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் அளிக்கும் தேவாலயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. இதில் 6 பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், கணிதவியல், வேதியியல், தாவரவியல், வணிகவியல்) பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் துணை ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பணியாற்றும் போத்தி, சாத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் அழகர்சாமி, கட்டணூரில் பணியாற்றும் வேல்முருகன், வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காசிராஜன் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலங்களவை எம்.பி. செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதம் இந்துக்களின் கலாச்சாரம், பண்பாடுகளால் நிரம்பிய தேசம். அதன் ஒரு துளி தான் செங்கோல். இந்துக்களான தமிழர் பெருமையும் அது தான். அந்த விழுமியங்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பின் தொடர்ந்தனர். அந்த பாரம்பரியத்தை பிரதமர் மோடி தொடர்கிறார். தமிழர் அடையாளத்துடன் ஆட்சியை அறத்துடன் நடத்துகிறார் என்றார்.
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேல்நிலைப்பள்ளிகளில் வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணிதம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை.5 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூறியதாவது; ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் www.sciencecitychennai.in என்ற அறிவியல் நகர வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஊரக பகுதிகளைச் சேர்ந்த தனிநபர், குழுக்கள் தங்களின் கண்டுபிடிப்புகளின் முழுமையான விவரங்களுடன், விண்ணப்பத்தை ஆக.23க்குள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வந்தனா கர்க், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரசம் முறையில் தீர்வு காண ஜூன் 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதற்கு சட்ட பணிகள் ஆணைக் குழுவை disatriuvannamalai@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு தலைவர் பி. மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.