Tamilnadu

News June 28, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம் 

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணி புரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகள் ஜூலை 2ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம் கேட்டுக்கொண்டார்.

News June 28, 2024

இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அதிமுக ஒருங்கிணைப்பு குழு மீதும், தன் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக இபிஎஸ் மீது கோவை கோர்ட்டில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன் வழக்கு மீதான விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News June 28, 2024

மக்களுக்கு கோவை மின்வாரியம் அறிவுறுத்தல்

image

மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய மின்சார நாள் ஜூன் 26ஆம் தேதியும், மின்சார பாதுகாப்பு வாரம் ஜூன் 26 – ஜூலை 2ஆம் தேதி வரையும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே கோவை மின்வாரியம் சார்பில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான வயர்கள், மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்தக் வேண்டாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 28, 2024

திருச்சியில் போலீசாரிடம் சிக்கிய 2 பேர்.!

image

திருச்சி காந்தி மார்க்கெட் பால் பண்ணை பகுதியில் இன்று லாட்டரி சீட்டுகள் விற்றதாக கதிரவன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதேபகுதியில், கார்த்திகேயன் என்கிற பேக் வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக அர்ஜுன் என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News June 28, 2024

கள்ளக்குறிச்சி: விருது பெற விண்ணபிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் ஜூலை 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜீன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

News June 28, 2024

திருச்சியில் நாளை குடிநீர் கட்.!

image

திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் விறகுபேட்டை மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, மரக்கடை பகுதிகளுக்கு நாளை ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

image

புதுகை, நரிமேடு வசந்தபுரி நகரில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் சேரலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.350 பயிற்சியின் முடிவில் அரசின் சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோா் 04322 225575, 94861 52007 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

News June 28, 2024

த.வெ.க சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

image

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று முதல்கட்ட (ஜூன் 28) பரிசு வழங்கும் விழா நடைபெற உள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறும் இந்த விழாவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கி 10 நிமிடங்கள் உரையாற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 28, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சிவி.சண்முகம் புகார்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், சட்டவிரோதமாக ஈவிஎம் இயந்திரங்களை விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றியுள்ளதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்றும் எனத் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

நெல்லை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

நெல்லை உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.

error: Content is protected !!