Tamilnadu

News June 21, 2024

நாகை: 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

image

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய்-சேய் நலப்பணி தடுப்பூசி பணி மற்றும் குடும்ப நலப் பணிகள் நடைபெற உரிய உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் பங்கேற்றனர்.

News June 21, 2024

கள்ளச்சாராயம் விவகாரம்: மதுரையில் போராட்டம்

image

தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாராயத்தை தடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதை பொருட்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

News June 21, 2024

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000!

image

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு 18 வயது வரை மாதம் ரூ.5,000 பராமரிப்பு தொகையாக வழங்கப்படும் என்றும், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News June 21, 2024

கோவை: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கோவை உட்பட 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

News June 21, 2024

திருவண்ணாமலை செல்ல சிறப்பு பேருந்துகள்

image

பௌர்ணமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவண்ணாமலை மற்றும் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று (வெள்ளி) 600 பேருந்துகள், நாளை (ஜூன் 22) 410 பேருந்துகள், ஜூன் 23ஆம் தேதி (ஞாயிறு) கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எஸ்.இ.டி.சி சார்பில் 30 ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

News June 21, 2024

மாஞ்சோலை மக்களை வெளியேற்ற விதித்த தடை தொடரும்!

image

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கபட்ட தொடரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், அரசின் ‘tantea’நிர்வாகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவது குறித்து தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்த நிலையில் மாஞ்சோலை மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில் தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News June 21, 2024

உடையார்பாளையம்: பொறியாளர் மர்ம மரணம்

image

மீன்சுருட்டி பகுதியில் வேலை பார்த்து வந்த பொறியாளர் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் பெயர் சுதாகர், ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 21, 2024

அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. அதில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய் சேய் நலப்பணி தடுப்பூசி மற்றும் குடும்ப நல பணிகளை நடை பெற உரிய உத்தரவு வழங்க வேண்டும்.

News June 21, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

image

இந்திய கம்யூனிட் கட்சி மற்றும் கிராமப்புற பெண்கள் சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூன் 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சட்டமன்ற கூட்டத் தொடரில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆண்டுக்கு 2 லட்சத்து 70 ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

News June 21, 2024

கோவையில் 102 பேர் மீது வழக்கு பதிவு.

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று கூறுகையில் மாவட்ட பகுதியில் போலீஸாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி கள் மற்றும் கள்ள மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் ரீதியிலான பயன்பாட்டுக்காக மெத்தனால் பயன்படுத்தும், இருப்பு வைத்திருக்கும் 11 நிறுவனங்களை அழைத்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!