Tamilnadu

News April 24, 2024

கோவை: நாளை தொடங்கும் செமஸ்டர் தேர்வு

image

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் நாளை (ஏப்.24) முதல் நடைபெற உள்ளது. வழக்கமாக தேர்வுகள் ஏப்ரல் மாத துவக்கத்தில் துவங்கி இறுதியில் முடிந்து விடும். ஆனால், நடப்பாண்டில் மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மே.5ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 24, 2024

திருப்பத்தூரில் 106.70 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூரில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர். இந்நிலையில் இன்று  திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.70 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறைந்த பட்சமாக 76.82 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

புதுச்சேரி: மர்மமான முறையில் சினிமா துறை சார்ந்தவர் மரணம்

image

சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் சினிமா ஆடை வடிவமைப்பு துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு புதுச்சேரி படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை மர்மமான முறையில் இருந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

தலைமை தேர்தல் அதிகாரிக்கு வானதி சீனிவாசன் கடிதம்

image

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி, கடந்த மார்ச் 16ஆம் தேதி நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மூடப்பட்ட தெற்கு கோவை சட்டசபை அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு, எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று கடிதம் எழுதியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தெற்கு கோயம்புத்தூர் தொகுதியில் சமூக சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

திண்டுக்கல்: கடும் வறட்சியால் விலை உயர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமி , செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படுகின்றன. மாம்பழ சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். மழையின்மை , கடும் வறட்சி, பூக்கும் காலதாமதம் ஆகிய காரணங்களால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கிலோ செந்தூரம் மாம்பழம் ரூ.100 முதல் ரூ.110விற்பனை செய்யப்படுகிறது.

News April 24, 2024

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது

image

சென்னை கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஸ்ரீஜித் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அப்பெண் புகார் அளித்திருந்தார். அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.

News April 24, 2024

பிரதமர் மோடி மீது எஸ்டிபிஐ கட்சியினர் புகார்

image

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஷித் இன்று புகார் அளித்துள்ளார். அதில் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் மோடி மத மோதல்களை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.‌ இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

News April 24, 2024

நத்தம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலி

image

நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (13). வத்திப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியின் இறுதித் தேர்வு முடிந்தது தனது அண்ணன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வத்திப்பட்டி அருகே உள்ள சொக்கன் ஆசாரி குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

News April 24, 2024

4.75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 7,91,27 ஆண்களும் 8 லட்சத்து 17 ஆயிரத்து 239 பெண்களும், 285 மூன்றாவது பால் இனத்தவர் என மொத்தம் 16,8521 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 4.75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகி உள்ளது.

News April 24, 2024

பக்தர்கள் செல்ல தடை

image

சேலம் மாவட்டம், கஞ்சமலை மேல் சித்தர் கோயில் கஞ்சமலை கோயிலுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியில் பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மலையேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மர்ம நபர்கள் மலை உச்சியில் தீ வைத்ததால் தீ பரவி வருவதையொட்டி பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

error: Content is protected !!