Tamilnadu

News June 5, 2024

நெல்லை மாவட்ட ஆட்சியர் மரக்கன்று நட்டார்

image

திருநெல்வேலி மாவட்டம், கருப்பன்துறையில் நம்ம ஊரு நந்தவன திட்டத்தின் கீழ் மரக்கன்று நடப்பட்டது. கருப்பன் துறை அழியாபதீஸ்வரர் கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, நம்ம ஊரு நந்தவனம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 5) மரக்கன்றுகளை நட்டாா். அப்போது சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News June 5, 2024

ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோட்டில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 5, 2024

நாளை இப்பகுதியில் மின்தடை

image

பெரம்பலூர் மின் கோட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் ஜூன் 6-ம் தேதி நாளை காலை 9:30 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பேரளி, ஆசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், எஸ் குடிக்காடு, கல்பாடி க.எறையூர், உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

கிருஷ்ணகிரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 5, 2024

கோவை: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 5, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

திண்டுக்கல் வக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து வடக்கம்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்தலக்குண்டில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 5, 2024

மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

image

அரியலூர் நகர காவல் நிலைய சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் ராமையன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொல்லாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பதும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News June 5, 2024

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு

image

பெண் காவலர்களை இழிவாக பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைதான போது கஞ்சா வைத்திருந்ததாக தேனி PC பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கில் இன்று சவுக்கு சங்கர் சென்னை சிறையிலிருந்து மதுரை மாவட்ட NDPS நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் இன்று ஆஜரானார். அதைதொடர்ந்து, ஜூன் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார்.

News June 5, 2024

புதுச்சேரியில் 24 பேர் டெபாசிட் இழந்தனர்!

image

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர் களமிறங்கினர். தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மாநில கட்சிகளான அதிமுக, நாம் தமிழர், சுசி கம்யூனிஸ்ட், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சிகளை தவிர மற்ற 19 பேர் சுயேட்சைகளாக போட்டியிட்டனர்.
இவர்களில் காங்கிரஸ், பாஜகவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

News June 5, 2024

சுற்றுச்சூழல் தினம்: புதிய ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

image

தருமபுரி புதியதாக கட்டப்படும் வரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் மரக்கன்றுகள் நட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிலிப்பின்ஸ் ராஜ்குமார், கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் ,  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!