Tamilnadu

News May 8, 2025

திண்டுக்கல்லில் இலவச கேரம் பயிற்சி முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கேரம் பயிற்சி முகாம் வருகிற மே 5 முதல் 21 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் தலைமையில் நடக்கும் இதில் 21 வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஸ்டைகர் கொண்டு வர வேண்டும் என மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாநில தலைவர் காஜா மைதீன் கேட்டுள்ளனர்.

News May 8, 2025

மயிலாடுதுறை: சீர்காழி மாணவி முதலிடம்

image

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ள தனியார் பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் மாணவி மதுஷா 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சாதனை புரிந்துள்ள மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News May 8, 2025

தமிழக அளவில் திருவண்ணாமலை 31வது இடம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 26,756 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 11,576 பேரும், மாணவிகள் 13,479 பேரும், மொத்தமாக 25,555 மாணவ மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.47 சதவீதமாக இருந்த நிலையில் இந்த 93.64 சதவீதம் உயர்ந்து தமிழக அளவில் 31வது இடம் பிடித்துள்ளது.

News May 8, 2025

முதல் 5 இடங்களை பிடித்த அரசு பள்ளிகள்

image

முதல் 5 இடங்களை பிடித்த மாநகராட்சி பள்ளிகள்: நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், புலியூர் மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.36 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 97.22 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் பள்ளி 95.59 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

News May 8, 2025

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு: பாபநாசம் அணையில் 84.55 அடி

image

நெல்லை மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம். பாபநாசம் அணையில் 84.55 அடி நீர் இருப்பு உள்ளது. 257 கன அடி நீர் வரத்து மற்றும் 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையில் 100.6 அடி, மணிமுத்தாறு அணையில் 85.47 அடி, வடக்கு பச்சையாறு அணையில் 40.25 அடி, நம்பியாறு அணையில் 13.12 அடி மற்றும் கொடுமுடி ஆற்றில் 14.75 அடி நீர் இருப்பு உள்ளது.

News May 8, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.08) வெப்ப சலனம் காரணமாக மாவட்டத்தின் உள் பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், அபிராமம், நயினார் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)

News May 8, 2025

சென்னையின் அடையாளம் ‘எழும்பூர் மியூசியம்’

image

1851ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எழும்பூரில் உள்ள மெட்ராஸ் அருங்காட்சியகம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகும். இது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக 2ஆவது பழமையான அருங்காட்சியகமாகும். சோழர், விஜயநகரம், ஹொய்சலா மற்றும் சாளுக்கியர் உட்பட அனைத்து முக்கிய தென்னிந்திய காலத்தையும் குறிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு கன்னிமாரா பொது நூலகமும் உள்ளது.

News May 8, 2025

திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் முதலிடம்

image

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த நோயல் ஜாய்சி 595 மதிப்பெண்களை கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!