Tamilnadu

News April 25, 2024

திருச்சியில் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் தவிப்பு.

image

திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.

News April 25, 2024

தென்காசி அருகே வாலிபரின் விபரீத முடிவு 

image

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பனம்பட்டி மலையராமபுரத்தை சேர்ந்தவர் காளி ராஜா (24) கட்டிட தொழிலாளி ஆன இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதாக சென்றவர் பாவூர்சத்திரம் ரயில் நிலைய பயணிகள் நிழற்குடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

முதுமலை : சுற்றுலா பயணிகளே உஷார்

image

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் பயணியர் வசதிக்காக, சுற்றுலா சார்ந்த வாகன சவாரி, தங்கும் விடுதி ஆகியவை ‘ஆன்லைன் புக்கிங் செய்யும் வசதி வனத்துறை மூலம் செயல்படுகிறது. இந்நிலையில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, “MUDUMALAITIGERRESERVE. COM என்ற இணையதளத்தில் மட்டும் முன் பதிவு செய்ய வேண்டும். எந்த தனியார் ஏஜென்சிகளுக்கும் அனுமதி வழங்கப் படவில்லை” என தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

கோவை: வியாபாரிகளை தாக்கி நகைகள் கொள்ளை

image

பேரூர் செல்வ சிந்தாமணி புதூர் பகுதியை சேர்ந்த நகை வியாபாரிகளான ராஜேந்திரன், சாந்தகுமார் கடந்த 22 ஆம் தேதி டூவீலரில் காந்திபுரம் சென்றுள்ளனர். அப்போது, குளக்கரையில் காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் டூவீலர் மீது மோதி விட்டு கத்தி, கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் நேற்று வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 25, 2024

ராமநாதபுரத்தில் பூக்களின் விலை அதிரடி குறைவு

image

தமிழகம் முழுவதும் சித்திரை திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் நடந்து முடிந்தது. குறிப்பாக மதுரையில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி உள்ளார். இந்த விழாக்களால் ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களாக மல்லிகைபூ , பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களும் பல மடங்கு விலை அதிகமாக இருந்தது. தற்போது விழாக்கள் முடிந்த நிலை யில் ராமநாதபுரத்தில் அனைத்து பூக்களின் விலையும் வெகுவாக குறைந்தது.

News April 25, 2024

கடலூர் அருகே பயங்கர விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயகுமார் (19).டூவீலர் மெக்கானிக் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற மகேந்திரா பிக்அப் வேன் தாறுமாறாக சென்று திடீரென்று பிரேக் போட்டதால் விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.விருதை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

News April 25, 2024

கணவர் மீது தாக்குதல்: மனைவி- மகன் கைது

image

கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(63), டிரைவர். இவரது மனைவி பூங்கொடி(50), மகன் முரளி(32). மாதையனிடம் சொத்தை எழுதி தரும்படி மனைவியும், மகனும் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவும் கேட்டு தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமயைில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

தூய்மை பணிகள் தீவிரம்

image

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கிரிவலம் சென்றனர். அதில் பக்தர்கள் பயன்படுத்திய குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை கிரிவல சாலையில் சிதறி கிடந்த நிலையில் அதனை இன்று நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். பக்தர்கள் குப்பைகளை சாலையில் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

News April 25, 2024

இலவச அழகுக் கலைப் பயிற்சி

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வருகின்ற 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குநா் அறிவித்துள்ளார்.

News April 25, 2024

அரியலூர் ஆட்சியர் இன்று ஆஜர்

image

தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி அரியலூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

error: Content is protected !!