Tamilnadu

News April 25, 2024

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு ஊர்வலம் டீன் சீதாலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலம் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் செவிலியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

News April 25, 2024

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள் : நீதிமன்றத்தை நாட முடிவு

image

புதுக்கோட்டையின் தீா்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னையாகக் கருதப்படும் தைலமரங்களை அகற்ற கோரும் பிரச்னையில், அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு விவசாயிகள் முடிவு செய்துள்ளனா். இவற்றில் கணிசமான பகுதி புதுக்கோட்டையைச் சோ்ந்தது . 1974-இல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் காப்புக்காடுகள் 99 ஆண்டுகள் ஒப்பந்தமாக வனத்தோட்டக் கழகத்துக்கு வழங்கப்பட்டன.

News April 25, 2024

ராமநாதபுரம் அருகே புரோட்டா மாஸ்டருக்கு கத்திக்குத்து –

image

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர் புரோட்டா மாஸ்டர் நவநீதன் (48). இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பியபோது அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம் (26) என்பவர் ரோட்டில் இருந்து மது அருந்தி உள்ளார். அங்கு இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டதில் கார்மேகம், நவநீதனை  கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. நவநீதன்  மனைவி அன்னபூரணம் புகாரில் கேணிக்கரை போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர்.

News April 25, 2024

சிகிச்சை பெற்று வந்த ஐடி ஊழியர் உயிரிழப்பு

image

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி அருகே டூவீலர் மீது காரை ஏற்றி இளைஞர் கொல்லப்பட்டார். இந்நிலையில் அதே சம்பவத்தில் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் என்ற இளைஞரும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இவ்வழக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

கொள்ளிடத்தில் அதிமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி

image

சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடை வீதியில் அதிமுக சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் இளநீர் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். ஒன்றிய செயலாளர் நற்குணன் மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

News April 25, 2024

திருச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

நாகையின் கோடியக்கரை கடற்கரை சிறப்பு!!

image

பாயிண்ட் காலிமர் முனை என்றழைக்கப்படும் கோடியக்கரை கடற்கரை நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. தேவராப்பாடலிலும் இக்கடற்கரை இடம்பெற்றுள்ள இங்கு 2004இல் அழிந்த சோழர்கால கலங்கரை விளக்கத்தின் எச்சம் காணப்படுகிறது. 12 கி.மீ நீளமுள்ள இக்கடற்கரையில் 250க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள் இங்கு இடம்பெயர்ந்து வரும்.

News April 25, 2024

காரைக்காலுக்கு நாளை சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நாளை வருகை தந்து காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அறுவை சிகிச்சை, இருதயவியல் சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்டவை சம்பந்தமாக சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க உள்ளனர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 25, 2024

போலீசார் அதிரடி வேட்டையில் 9 பேர் மீது வழக்கு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்.24)  காவல் ஆய்வாளரின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 27 மதுபாட்டில்கள்,2700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள்,2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

News April 25, 2024

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

image

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்த வரபிரசாதம் (60) என்பவர் அவரது மனைவி விசுவாசம் (50) நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்தார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வரபிரசாதம் மீதான குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!