Tamilnadu

News April 26, 2024

திருச்சியிலுள்ள பஞ்சதலத்தின் சிறப்பு!

image

காவிரியின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருவானைக்காவல் ஜம்புகேசுவர்ர கோவில் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாகும். 60ஆவது தேவரப்பாடல் பெற்ற இத்தலத்தில் புராணகாலத்தில் வெண்நாவல் மரங்கள் நிறைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவேரி வறண்டிருந்தாலும், மூலவர் இருக்கும் இடத்திற்கு கீழ் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில் 156 கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன

News April 26, 2024

திருப்பத்தூர்: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் பலி

image

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி, நேற்று காலை கிராமத்தாா்கள் கோயிலிருந்து ஊா்வலமாக வந்து காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். தொடர்ந்து நடந்த மஞ்சுவிரத்தில் மாடு முட்டியதில் மடக்கரைப்பட்டியை சோ்ந்த வெள்ளைச்சாமி உயிரிழந்தார்.

News April 26, 2024

அமைச்சர் வழக்கு ஜூன் 12க்கு ஒத்திவைப்பு

image

தற்போது தமிழக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News April 26, 2024

சோளிங்கர்: ஊருக்குள் வந்த புள்ளி மான்

image

சோளிங்கர் தாலுகா போளிப்பாக்கம் கிராமம் அருகே பாணாவரம் காப்பு காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று இன்று காலை ஊருக்குள் ஓடி வந்தது. பொதுமக்கள் புள்ளிமானை பாதுகாப்பாக பிடித்து கட்டிவைத்தனர் . பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புள்ளி மானை மீண்டும் பாணாவரம் காப்புக்காட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.

News April 26, 2024

விழுப்புரம் அருகே திமுக மாவட்ட கவுன்சிலர் கைது

image

முகையூர் திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜீவ் காந்தியை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தேர்தல் பணியின்போது பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாக காணை போலீசார், ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், ராஜீவ் காந்தி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

News April 26, 2024

திருவாரூர், வடுவூர் பறவைகள் சரணாலயம்!

image

திருவாரூர், வடூவூர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை இவ்விடத்திற்கு 38க்கும் மேற்பட்ட, 20,000 வெளிநாட்டு பறவைகள் இடம்பெயர்வது வழக்கம். இங்கு வரும் பறவைகளின் உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. இங்குள்ள பல ஏரிகள் பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது.

News April 26, 2024

திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில் சிறப்பு!

image

திருவள்ளூர், தேவி மீனாட்சிநகரில் அமைந்துள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சிநேய சுவாமி கோவில். இங்கு 2004ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 32 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர்சுவாமி சிலை உள்ளது. இந்த இடம் புராண காலத்தில் ருத்ர வனம் என அழைக்கப்பட்டுள்ளது. 108 அடி உயரத்தில் விமானமும், 15 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்சிநேயர் தோற்றம் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 26, 2024

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு முன்பதிவு

image

பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. பயிற்சி காலம் ஓர் ஆண்டு ஆகும். தமிழில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 17 வயது நிரம்பி, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

News April 26, 2024

தேனியில் மதிக்கத்தக்க ஆங்கிலேயரின் மணிமண்டபம்!

image

பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூர் அருகே லோயர்கோம்பட் பகுதியில் அமைந்துள்ளது. இது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளின் விவசாயத்திற்கும், பாசன வசதிக்காகவும் முல்லை பெரியார் அணையைக் கட்டிய ஆங்கிலேயர் ஜான் பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டது. 1895ஆம் ஆண்டு ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்த அவர், வறட்சியைக் கண்டு பெரியார் ஆற்றில் பல தடைகளைத் தாண்டி இவ்வணையைக் கட்டினார்

News April 26, 2024

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிக்கல்

image

மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச். டி, வாய்மொழித் தேர்வு (வைவா ) முடித்தும், சிண்டிகேட் ஒப்புதல் கிடைக்காததால் 190 Ph.D மாணவர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர். தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 4000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. UGC வழிகாட்டுதல்படி இப்பணிக்கு Ph.D அவசியம்.

error: Content is protected !!