Tamilnadu

News April 26, 2024

மாம்பழ கடைகளில் அதிகாரிகள் சோதனை

image

ராமநாதபுரத்தில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். செயற்கை முறையில் பழுக்க வைத்து உள்ளனரா என்று கண்டறிய மாம்பழங்களை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

News April 26, 2024

வேலூர்: மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை 2 ஆம் ஆண்டு பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை என அரசின் உத்தரவு உள்ளது. இருப்பினும் நிர்வாகம் தேர்வு கட்டணம் செலுத்துமாறு கட்டாய படுத்தியுள்ளது. இதனால்  15திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியபோது நிர்வாகம் கட்டணம் தேவையில்லை என்று கூறியது.

News April 26, 2024

ஆலங்குடியில் குருப் பெயர்ச்சி லட்சார்ச்சனை

image

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் மே 1 ஆம் தேதி குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. லட்சார்ச்சனை இன்று முதல் 28 ஆம் தேதி வரையும் மேலும் மே 6 முதல் 12 ஆம் தேதி வரையும் நடைபெறும். கட்டணம் ரூ 400. மேலும் விவரங்களுக்கு 04366-269407 என்கிற ஆலய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

News April 26, 2024

சென்னை ஏர்போர்ட் குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள்

image

சென்னை விமான நிலையத்தில் இன்று(ஏப்.26) குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குப்பைத் தொட்டியில் ஒரு பார்சல் இருந்ததை கண்டு அதிர்ந்த ஊழியர்கள் மத்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி, பிரித்து பார்த்தபோது அதில் 1,200 கிராம் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதை வைத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 26, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கைது 

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் வாசுதேவன்(47) என்பவர் கட்டிட வரைபட அனுமதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரிடம் கட்டிட வரைபட அனுமதிக்கு ஒப்புதல் வழங்க நகரமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி (56), ரூ.10000 லஞ்சம் கேட்டதின் அடிப்படையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் பணத்தை கொடுக்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோதிமணியை கைது செய்தனர்.

News April 26, 2024

கடலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

image

சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன், உதவி இயக்குனர் பூங்குழலி மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்தனர்.

News April 26, 2024

தி.மலை அருகே குவிந்த மக்கள்

image

ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு மேட்டுகுடிசை காரமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாக விளங்கிவரும் அருள்மிகு ஸ்ரீ குள்ள செல்லியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.யாக கலசத்தில் யாக பூஜைகள் நடத்தி கலச புறப்பாடு கொண்டு கோபுர கலசத்தில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி அம்மனை வணங்கினர்.

News April 26, 2024

ராணிப்பேட்டை: ஆடுகளுக்கு தடுப்பூசி – கலெக்டர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை முழுவதும் 1.54 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி இன்று(ஏப்.26) தெரிவித்துள்ளார். செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் பரவுவதை தடுக்க வரும் 29ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மாவட்டம் முழுவதும் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 4 மாதத்திற்கு குறைவான குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது.

News April 26, 2024

திருப்பத்தூர் அருகே சோகம் 

image

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை நாயனத்தியூர் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் மணிகண்டன் (24) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மது போதையில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2024

தி.மலை – மலையின் மகத்துவம் அறிவோம்!

image

பஞ்சபூத தலத்தின் அக்னித் தலமான புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை 260 கோடி பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். பால் பிரண்டன் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளார் தனது “மெசேஜ் பிரம் அருணாச்சலா” எனும் நூலில் “லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை” எனக் கூறியுள்ளார். முக்தி தலமான இம்மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து சமாதியடைந்திருக்கின்றனர்.

error: Content is protected !!