India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான வாகனங்களையும் மாதந்தோறும் ஆய்வு செய்வது வழக்கம் அதன்படி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் போலீஸ் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? மற்றும் வேறு ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு சௌமியா தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வ விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக நேரம் வெளியே செல்ல வேண்டாம். தாகத்தை குறைக்க குடிநீர் மற்றும் பழச்சாறுகள் முழுமையாக அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் வெளியே வராமல் இருப்பது மிகவும் நல்லது. இளநீர் அதிகம் பருக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடற்கரை ஓரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற இக்கோயில் 2000-3000 ஆண்டுகள் பழமையானதாககும். 157 அடி உயர கோபுரம் உடைய இக்கோவில், கடலை பார்த்தபடி அமைந்திருக்கிறது. தமிழ்கடவுளான முருகனுக்கு நடைபெறும் திருவிழாக்களில், இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலகப் புகழ் பெற்றதாகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கோடை விடுமுறை தொடங்கி நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வரும் 29 ஆம் தேதி முதல் ஜுன் 5ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளித்து புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46°C வரை வெப்ப அளவு பதிவாகக்கூடும் என்றும் நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மே 5 முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரூர் தென்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்த அம்பிதுரை மனைவி அனிதா(38). இவர் நேற்று(ஏப்.25) தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் திரும்பவில்லை. அவரை தேடி கணவர் சென்றபோது
ரமேஷ் என்பவரின் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். வனவிலங்குகள் வருவதை தடுக்க அமைத்த மின்கம்பியை அனிதா தெரியாமல் மிதித்து உயிரிழந்து தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக் ரெட்டி வாசுதேவன், ஆகியோர் தலைமையில், முன்னிலை ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி
அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்
ஏப்.23ம் தேதி சேதுபாவாசத்திரம் கடற்பகுதியை சேர்ந்த முருகேசன், ஹரிஹரன், பாலசிங்கம் ஆகியோர் தங்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு கடலில் விட்டனர். இந்நிலையில் அரிய வகை உயிரினங்களை பாதுகாத்த இந்த 3 பேர் உட்பட 15க்கும் மேற்பட்டோருக்கு, மே.28ம் தேதி கடல் பசு தினத்தில் பாராட்டு விழா நடத்தி ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி (ம) அதை சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா அறுவடைக்கு பின்னர் கோடையில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், விதைப்பு செய்யப்பட்ட தர்ப்பூசணி, 60 – 65 நாட்கள் ஆன நிலையில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பழங்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்தாலும் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அரசினர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்பு படையினரிடம் பாதுகாப்பு குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.