Tamilnadu

News April 26, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தகுந்த வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 26, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மிக முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி, வாத்து மற்றும் காடை இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும். நோய் அறிகுறி உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது. பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்பந்தமாக புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

 கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

image

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம், வ.உ.சி பூங்கா மைதானத்தில் வருகிற 29ம் தேதி தொடங்கி, மே 13 வரை, 15 நாட்கள் நடக்கிறது. சிறப்பு பயிற்சியாளர்களை கொண்டு, தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஜிம்னாஸ்டிக் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ரூ.200 சந்தா செலுத்த வேண்டும்.

News April 26, 2024

திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

image

கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கும்படி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறுகளை வழங்கினார்.

News April 26, 2024

2ம் கட்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா அழைப்பு

image

திருச்சி அதிமுக மாஜி அமைச்சர்
மு.பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் கோடைகால தண்ணீர் பந்தல் 2ம் கட்டமாக நாளை  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியிலும், 28ம் தேதி மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியிலும், 29ம் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதியிலும், மே1ம் தேதி முசிறி சட்டமன்ற தொகுதியில் திறக்கப்பட உள்ளதால், இதில் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News April 26, 2024

விருதுநகர் எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பு அருவி!

image

விருதுநகரின் பசுமையான கிழக்குப் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது செண்பகத் தோப்பு அருவி. இது உள்ளூர் வாசிகளின் குற்றாலமாக இருந்து வருகிறது. இதிலிருந்து வரும் சிற்றோடைகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. இதன் வனப்பகுதி மேகமலை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வனத்திற்குள் கலந்து இருப்பதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது செண்பகத் தோப்பு.

News April 26, 2024

விழுப்புரம் அழகிய ராஜகிரி கோட்டை!

image

விழுப்புரம், செஞ்சிக் கோட்டையில் உள்ள மூன்று மலைக்கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும். கி.பி. 1200இல் கட்டப்பட்ட இதன் பொருள் மன்னன் மலை ஆகும். இக்கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்டது. இதன் வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம், அரண்மனை தளம், மணிமாடம், களஞ்சியம், இந்தோ-இஸ்லாமிய பாணி கருவூலம், தானியங்கள் பாதுகாப்பு கட்டடம், யானைக்குளம், கோவில்கள், பள்ளிவாசல்கள் போன்றவை சிதைந்த நிலையில் உள்ளன.

News April 26, 2024

சேலம்: இபிஎஸ் திறந்து வைத்த நீர், மோர் பந்தல்

image

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், அதிமுக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், இன்று(ஏப்.26) சூரமங்கலம் பகுதியில் நீர், மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News April 26, 2024

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பூக்கள்

image

கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மே மாதம் நடைபெற உள்ளது. பூங்கா நிர்வாகத்தினர் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது அந்த நாற்றுகள் பூக்க தொடங்கி சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. 

News April 26, 2024

வேலூரின் அமிர்தி விலங்கியல் பூங்கா!

image

வேலூர் நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அமிர்தி விலங்கியல் பூங்கா. 25 ஹெக்டர் அளவு உள்ள இப்பூங்காவில் பாதி வனமாகவும் மீதி சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. மலையேற்றம், காட்டு விலங்குகள் மற்றும் நீர்வீழ்ச்சி இருப்பதால் பார்வையாளர்களின் வருகை அதிமாகி வருகிறது. எதிர்காலத்தில் இந்த பூங்காவில் யானைகள் முகாம் அமைத்து, சீரமைக்கப்பட்டு முதன்மை சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!