Tamilnadu

News April 27, 2024

புதுக்கோட்டை அருகே சரமாரி வெட்டு 

image

அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பெருங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக உள்ளார். நேற்று நள்ளிரவு அவர் கடையில் இருந்து அறந்தாங்கியில் வசிக்கும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

News April 27, 2024

கள்ளக்குறிச்சி அருகே 13 பேர் சிக்கினர்

image

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக கள்ளக்குறிச்சி,தியாகதுருகம், வரஞ்சரம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் ஆகிய காவல் நிலையங்களில் தலா இரண்டு நபர்கள் மீதும், சின்னசேலம் காவல் நிலையத்தில் மூன்று நபர்கள் மீதும் என மொத்தம் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சி நாளை நிறைவு!

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த 2-ம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பானது நாளையுடன் (28-ஆம் தேதி) நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

சீர்காழி கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

image

சீர்காழியில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அசோக்குமார் சீனிவாசன் தனிப்பிரிவு போலீசார் மூர்த்தி காவல் ஆளிநர்கள் என 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

News April 27, 2024

திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி,

image

திருச்சியில் வீசும் வெப்ப அலையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை பொழுதே கடும் வெப்பத்துடன் தான் விடிகிறது .பகல் 11 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெப்ப அலை வீசுகிறது. மாநகர பஸ்களில் பயணிக்கும் பயணிகள் வியர்வையில் குளித்தபடி செல்வதை நேற்று காண முடிந்தது. மேலும் வாகன ஓட்டி களுக்காக ,சிக்னல்களில் துணி பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.

News April 27, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி

image

நிலக்கோட்டை அருகே பொட்டிசெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு(38). இவர் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வத்தலக்குண்டில் இருந்து கொடைரோடு நோக்கி டூவீலரில் சென்றபோது அவ்வழியாக நடந்து சென்றவர் மீது பாலகுருவின் டூவீலர் மோதியது. இந்த விபத்தில் பாலகுரு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: இருவர் பலி

image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது .இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

News April 27, 2024

ராமநாதபுரம்; புல்லட் மோதியதில் பெண் படுகாயம்!

image

ராமநாதபுரம் மாவட்டம் முதலூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி மனைவி மலர்விழி(59), தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று மாலை காருகுடி பஸ் ஸ்டாப்பில் சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதியில் வந்த புல்லட் பைக் பலமாக மோதியதில் படுகாயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் காந்தி புகாரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்

News April 27, 2024

புதுவையில் ஷேக்ஸ்பியர் படைப்புகளின் கண்காட்சி

image

புதுவை வ.உ.சி. வீதியில் புதுவை அருங்காட்சியகத்தில் ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சியில் ஷேக்ஸ்பியரின் துன்பியல் (டிராஜிடி ) நாடகங்களுக்கான படங்கள், அவரது வாழ்க்கை, கல்வி, திருமண வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியானது ஏப்ரல் 29 வரை நடைபெறுகிறது என்று அருங்காட்சியகம் ஆராய்ச்சி நூலக மேலாளா் மனோரஞ்சினி திருநாவுக்கரசு தெரிவித்தாா்

News April 27, 2024

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!