India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் மாநிலங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை விபத்துக்களை தவிர்க்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு இன்று அதிரடியாக அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.
தி.மலை மாவட்டத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே.1 இல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றுவரை கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான தகவல்கள், வழிகாட்டுகளோ கிராமங்களுக்கு வழக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வித்துறையின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் இன்று (ஏப்.27) கோடை விடுமுறை வகுப்பு நடைபெற்று வருகின்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி தமிழகத்தில் தற்பொழுது மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதால் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி அருகே தும்பேரி பகுதியில் சுரேஷ் என்பவர் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடை திறந்து வைத்து சிறிது நேரத்தில் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தது வாணியம்பாடி தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீனவ இளைஞர்கள் ஊர்காவல் படையில் சேர்வதற்கு வரும் ஏப்.29 முதல் மே.14 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தாம்பரம் காவல் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதில் 18வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விபரங்களுக்கு 82207 29165, 74183 75910, 86104 15418 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசு அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இதில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படுள்ளன. 1851 ஆம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரில் இருந்து பழைய அருங்காட்சியகம் 1854 ஆம் ஆண்டு பந்தியன் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின் ஆண்டுக்காண்டு விரிவடைந்து கொண்டே இருந்தது.
ஈரோடு பெரிய வலசு – கொங்குநகர் பகுதியில் பொன்னுசாமி (60) என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடை உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கடையில் தீ பிடித்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த தறிப்பட்டறை தொழிலாளர்கள், ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். பின் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
நாகை வேளாண்துணை இயக்குனர் தெய்வேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளைநிலங்களை கோடை உழவு செய்வதன் மூலம் வயல்வெளிகளில் உள்ள பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள் அனைத்தும் மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது . இதனால் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும். எனவே கோடை உழவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மினி சகாயபுரத்தை சேர்ந்தவர் சேசு (26) விசைப்படகு மீனவர். இவர் இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று படகிலிருந்து தவறி கடலில் விழுந்து இறந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் இவரது உடலை மீட்டனர். இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பந்தயசாலை பகுதியில் இன்று காலை (ஏப்ரல்.27) அதிக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் நிஜாஸ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பந்தயசாலை போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.