Tamilnadu

News June 3, 2024

நாகையில் மழை பெய்ய வாய்ப்பு!

image

சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூன் 3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 3, 2024

திருவாரூரில் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜூன் 3) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 3, 2024

சென்னையில் மிதமான மழை பெய்யும்

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

News June 3, 2024

தூத்துக்குடி: உயிரிழந்தவரின் உடல் உறுப்பு தானம்

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள ரத்னாபுரி பகுதியை சேர்ந்த மகாராஜன் (38) என்பவர் கடந்த 30ம் தேதி ஆறுமுகநேரி அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில் அரசு சார்பில் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

News June 3, 2024

தி.மலை: வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

தி.மலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான தி.மலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தி.மலை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.

News June 3, 2024

மதுரை கலைஞர் நூலகத்திற்கு 8 லட்சம் பேர் வருகை!

image

மதுரையின் மற்றொரு பெருமையாக மதுரை கலைஞர் நூலகம் திகழ்கிறது. திறப்பு விழா கண்டு ஒரு ஆண்டை நெருங்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு இதுவரை 8 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஆசியாவிலேயே பிரமாண்டமான இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இங்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

News June 3, 2024

புதுக்கோட்டை:மருத்துவமனை அருகே நாய்கள் அட்டூழியம்

image

ஆலங்குடி பேரூராட்சியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் நீடித்து வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனை அருகே தினம் வாகன ஓட்டிகள் குழந்தைகள் பெரியவர்கள் வரை மற்றும் ஆடு மாடுகள் கடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்கிறது. இன்று ஆட்டு குட்டியை நாய்கள் கூட்டமாக வந்து கடித்து குதறியது இதனை மக்கள் அச்சத்துடன் பார்த்து நிர்வாகத்திடம் புகார் செய்கின்றனர்.

News June 3, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை நிலவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பொழிந்த மழையளவு அதிகபட்சமாக ஆலங்காயம் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக திருப்பத்தூர் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஆலங்காயம் -22 மி.மீ, வடபுதுப்பட்டு – 22 மி.மீ, ஆம்பூர் -16 மி.மீ, நாட்றம்பள்ளி – 14.40 மி.மீ, வாணியம்பாடி – 6 மி.மீ
திருப்பத்தூர் – 3 மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

News June 3, 2024

கிருஷ்ணகிரி: மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

image

ஓசூரில் பகுதியில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற 381 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நாகேஸ்வரன் வரவேற்றார். இதில், இன்போசிஸ் நிறுவன துணைத்தலைவர் விக்டர் சுந்தர்ராஜ் கலந்துகொண்டு தேர்வான மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.

News June 3, 2024

திருப்பூர்: மது குடிக்க பணம் தராததால் வாலிபர் விபரீதம்

image

காங்கேயம் அருகே பாப்பினி பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சரண் (21). குடிப்பழக்கம் கொண்ட இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு கணையம், நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவரது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே வாலிபர் சரண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!