India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அகஸ்தியாபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, கடலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளி பொருட்கள் அடங்கிய பையை தவறவிட்டார். இந்நிலையில் அரக்கோணம் வந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொன்ராஜ் தவறவிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களை மீட்ட அதிகாரிகள் இன்று(ஏப்.27) பொன்ராஜ் குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகன் சக்திவேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சொத்து தகராறில் தந்தை என பாராமல் குழந்தைவேலுவை அடித்துக்கொன்றார் . இது குறித்த வீடியோ வெளியானதை தொடர்ந்து வழக்கு போடாமல் காலம் கடத்தியதாக கைகளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமியை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவிட்டுள்ளார்.
பொன்னேரியில்
அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கரி கிருஷ்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது
ஐந்தாம் நாள் உற்சவமாக நாச்சியார் இன்று ஊஞ்சல் ஊர்வலமும் இரவு கருட வாகனத்தில் பெருமாள் வலம் வந்து அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்வு இன்று இரவு நடைபெறுகிறது பிரம்மோற்சவ சந்திப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்திற்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலில் ஏப்.29 முதல் மே.4 வரை ஓய்வு எடுக்க உள்ளார் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி, பொட்டனேரி அடுத்த ஆரியன்காட்டுவளவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குஞ்சுபையன்(55). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று(ஏப்.26) காலை 10:00 மணிக்கு குஞ்சு பையன், பொட்டனேரியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றபோது சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேட்டூர் தீயணைப்பு குழுவினர், அவரது சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லுாரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் அப்பகுதியில் பூம்புகார் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத இருவர் 200 ரூபாய்க்கு சில்லரை கேட்டதாகவும், சில்லரை கொடுத்துவிட்டு அமர்ந்தபோது, பணப்பெட்டியில் இருந்த மோதிரம், தோடு உள்ளிட்ட 125 கிராம் நகைகள் திருட்டுபோனதும் தெரியவந்தது. இதுகுறித்து நேற்று(ஏப்.26) அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
பொள்ளாச்சி- வால்பாறை சாலையில், ஆழியாறு வனப்பகுதியில் அமைந்துள்ளது குரங்கு அருவி. சுமார் 18 அடி உயரத்திலிருந்து விழும் இவ்வருவிக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிப்படுகின்றனர். குரங்கள் அதிகமாக இருக்கும் இம்மலையில் உள்ளது. இங்கு சற்று வழுக்கும் பாறைகள் சற்று அதிகமாக உள்ளன. தற்போது இங்கு வனத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அருப்புக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெயக்குமாருக்கும் தம்மாந்தெருவை சேர்ந்த அம்பரேஷ் (27) என்பவருக்கும் இடையே பார்சல் டெலிவரி செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.டவுன் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இராமநாதபுரத்தில் கோடை காலம் துவங்கியதை அடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.