Tamilnadu

News April 27, 2024

தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

image

தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை தேரோட்டத்தின் போது  ஆங்காங்கே பக்தர்கள் வீசிய குடிநீர் பாட்டில் நெகிழி பொருட்கள் மற்றும் அன்னதானம் நடைபெற்ற இடங்களில் இருந்த வாழை இலை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட உணவு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப்படுத்தினர். இந்நிலையில் இவர்களைப் பாராட்டி நேற்று தனியார் அறக்கட்டளை சார்பில் சிக்கன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

News April 27, 2024

திண்டுக்கல்: முக்கிய நிர்வாகி கைது

image

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி (45). இவர் குஜிலியம்பாறை வட்ட லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆவார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கும் D.கூடலூரை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டு தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

News April 27, 2024

ஈரோடு மாவட்ட மக்களுக்கு அலர்ட்

image

ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலை அளவு, இந்தியா அளவில், 2வது இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள், கோடை வெப்ப பாதிப்புகளை தடுக்க காலை, 11 மணி முதல் மாலை, 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், இளநீர், பழச்சாறு போன்றவை பருகலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

சென்னை அருகே சிக்கனில் நெளிந்த புழு

image

சென்னை பல்லாவரம் அடுத்த தாம்பரம் சாலையில் உள்ள பிரியாணி கடையில் சௌந்தர்ராஜன் என்பவர் செட்டிநாடு சிக்கன் பார்சல் வாங்கியுள்ளார். வீட்டில் சென்று பார்த்த போது, சிக்கனில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், கடை உரிமையாளரிடம் முறையிட்ட போது, சூடாக கொடுக்கப்பட்ட சிக்கனில் உயிரோடு எப்படி புழு வரும் என்றார். இதுகுறித்து அவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

News April 27, 2024

எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

image

வால்பாறை அருகே கருமலை தொழிலாளர்கள் 1000 பேர் இன்று தேயிலை எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர் . சலுகைகள் மற்றும் முறையாக சம்பளம் வழங்க வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களின் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கருமலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

News April 27, 2024

செங்கல்பட்டு: சிக்கனில் நெளிந்த புழு

image

தாம்பரத்தை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் நேற்று மதியம் முடிச்சூர் சாலையில் உள்ள அலீப் பிரியாணி கடையில் செட்டிநாடு சிக்கன் பார்சல் வாங்கி சென்றார். பின்பு வீட்டிற்கு சென்று பார்சலை திறந்த போது, சிக்கனில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பிரியாணி கடையில் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சௌந்தர்ராஜன் மற்றும் வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டனர்.

News April 27, 2024

புதுச்சேரி சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்

image

வெப்ப காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்கவும் அவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிக சூரிய வெப்பத்தால் உருவாகும் அயர்ச்சி மற்றும் பக்கவாதத்தை தடுத்து பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளும்படி சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

News April 27, 2024

திருச்சி விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

image

முக்கிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீவிர சோதனை நடந்து வரும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2024

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் மே.1ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாக  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார் .

News April 27, 2024

கள்ளக்குறிச்சி மேல்நாரியப்பனூர் தேவாலயம் சிறப்புகள்

image

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. ஆண்டுதோறும் புனித அந்தோணியாரின் வாழ்க்கை மற்றும் பணியை போற்றும் வகையில் ஜூன் மாதத்தில் 9 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த தலத்தில் அனைத்து மதத்தினரும் வழிபடுவது சிறப்பான ஒன்றாகும்.

error: Content is protected !!