India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் மதுரை சித்திரை திருவிழா வீடியோவை பகிர்ந்து, “மதுரையில் இந்துத்துவாவின் பலம் வெளிப்படுகிறது” என்று கூறி இருந்தார். இதற்கு அமைச்சர் பிடிஆர், ” உங்கள் மாற்றுப் பிரபஞ்சத்தில் கூட அது உண்மையாக இருக்காது. இது மீனாட்சி தேவியின் சக்தி, உங்கள் மதவெறி வழிபாட்டில் பயன்படுத்த தெய்வீகமான ஒன்றை அபகரிக்க வீண் முயற்சியில் ஈடுபடாதீர்கள் ” என பதிலளித்துள்ளார்.
வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று, நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். உசிலம்பட்டியில் இன்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை எதிர்க்கட்சியாக இருந்து பழனிச்சாமி மக்களுக்கு சேவை செய்து வருவதாக தெரிவித்தார்.
பழனியில் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட செம்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சண்முகம் என்பவர் பாதுகாத்து வைத்திருந்த சல்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு சிவகங்கை ஆண்ட விஜய ரகுநாத பெரிய உடை பூமி தானம் அளித்துள்ளார். கோயிலில் முருகனுக்கு கால பூஜைகள் தடையின்றி நடைபெற ஆறு ஊர்களை தானமாக வழங்கிய செம்பேடு எழுதியது தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்ட தண்ணீர் பந்தல் திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் திறந்தார்.
விழுப்புரத்தில் இன்று 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் 2 கார்களில் கடத்தி செல்லப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட கோவிந்தராஜ், ஏழுமலை ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் செஞ்சி அனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
கரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் விளையாட்டு அரங்கில் ஏப்.29ஆம் தேதி முதல் மே.13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, ஜூடோ, வளைகோல்பந்து மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர், மாணவர் அல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காமகோட்டி நாயகி கோயில் என்று அழைக்கப்படும் காமாட்சி அம்மன் கோயில் 5-8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் நிறுவப்பட்டு 14ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தல் தமிழகத்திலுள்ள சக்தி தலங்களில் ஒன்றாக உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில் காமாஷி சன்னதியில் இந்து வடிவங்களில் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் திவ்ய தேசங்கலில் ஒன்றான வராஹப் பெருமாள் சன்னதியும் உள்ளது.
உடுமலை கணக்கம்பாளையம் விஏஓ-வாக பணியாற்றிய கருப்புசாமி கடந்த 23ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தில் கிராம உதவியாளர் சித்ரா, மணியன் தான் என் சாவுக்கு காரணம் என எழுதி இருந்தார். காவல்துறையினர் தற்பொழுது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உடுமலை வட்டாட்சியர், சித்ராவை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் இன்று காலை வானில் ஒரு விமானம் தொடர்ந்து வட்டமடித்த வண்ணம் இருந்தது. ஒரே இடத்தில் 10 முறைக்கும் மேல் சுற்றி சுற்றி வந்த விமானத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், வானில் வட்டமடித்தது பயிற்சி விமானம் என தகவல் தெரிந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வருகின்ற ஜூன் 4ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என எஸ்பி மணிவண்ணன் இன்று (ஏப்ரல் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.