Tamilnadu

News April 28, 2024

மக்களே மிஸ் பண்ணீடாதீங்க 

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தருவை மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹாக்கி, தடகளம், கைப்பந்து, கால்பந்து, கூடைப்ந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

வெப்ப அலை வீச வாய்ப்பு

image

சேலம் உட்பட 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

News April 28, 2024

ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கியது திருவிழா

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது ஸ்தலமாக விளங்கும் கள்ளபிரான் திருக்கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் ஊர்வலமாக வந்து பின்னர் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News April 28, 2024

சந்தன காப்பு அலங்காரத்தில் மாழையொண்கண்ணி அம்பிகை

image

திருக்குவளை அருகே வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் சித்திரை பெருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நேற்று நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு மூலவரான மனத்துணை நாதர் மற்றும் மாழையொண்கண்ணி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

News April 28, 2024

சேலம் மக்களே “யாரும் வெளியே வராதீங்க”  

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை வரும் வாரம் மேலும் தீவிரமாகும் என்பதால், முதியவர்கள், கர்ப்பிணிகள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார்.  

News April 28, 2024

ஆன்லைன் ரம்மி- ஒருவர் தற்கொலை 

image

திருவள்ளூர், திருத்தணி பெரியார் நகர் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராமு(38). இவர் அரக்கோணம் பழனிபேட்டையில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆடியதில் பல லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்த நிலையில், இன்று விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

News April 28, 2024

திருப்பத்தூர் அருகே விபத்து: ஒருவர் பலி 

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் மிட்டாளம் பகுதியை சேர்ந்த மணிமேகலை (40) தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் பகுதியில் உள்ள தனது மகளை பார்க்க வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் மணிமேகலையின் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2024

வேலூர் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏப்ரல் 29-ம் தேதி முதல் தொடர்ந்து 30 நாட்களுக்கு நடைபெறவுள்ள ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்களில் ஆடு வளர்ப்போர் தங்கள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

பெண் மீது கொடூர தாக்குதல்

image

கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிப்பாளையம் ஏரி கரையில் ஏழுமலை மனைவி பிரேமா என்பவரை அடையாளம் தெரியாத 3 இளைஞர்கள் தாக்கிவிட்டு தப்பியோடினர். காயமடைந்த பிரேமா வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேமாவை தாக்கிய மூன்று இளைஞர்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

News April 28, 2024

முதலமைச்சரின் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் விருது, ரூ 1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 15 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!