India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி தென்னூர் மனோகரன், தீபா இவர்களது மகன் சாருகேஷ் (19) திருச்சி கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார் .தன் நண்பர்கள் பலரும் வேலையில் பிளேசாகி விட்டார்கள். நாம் மட்டும் இன்னும் பிளேஸ் ஆகவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்த சாருகேஷ் ,நேற்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி இவரை கிள்ளை பகுதியை சேர்ந்த கார்த்திக் (22) என்பவர் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் காவல்துறையினர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
அருமனையை சேர்ந்தவர் விஜித் (20). பிளம்பர். நேற்று மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திருவரம்பு சிஎஸ்ஐ சர்ச் அருகில் விஜித்தின் கட்டுபாட்டை இழந்து சர்ச் அருகில் இருந்த வீட்டு காம்பவுண்ட் சுவரில் பைக் மோதியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீஞ்சூர் காந்தி ரோடு வசந்த் & கோ அருகே துணி சுற்ற பட்ட நிலையில் கை தனியாக வெட்டப்பட்டு நடு ரோட்டில் கிடப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விசாரித்ததில் பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள செய்தியில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழ கண்காட்சி மே 24, 25, 26 தேதிகளில் மூன்று நாள் ந்டைபெறுகிறது . இதை முன்னிட்டு சிறந்த பழத்தோட்டங்கள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும். இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்கா அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.29) முதல் போட்டிக்கான விண்ணப்ப படிவுகள் வழங்கப்படுகிறது .போட்டி படிவங்களை சமர்பிக்க மே 11 தேதி கடைசி நாளாகும்
ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக ராமநாதபுரம் டி.டி. விநாயகர் தொடக்கப்பள்ளியில் 6 வயது முதல் 16 வயதுடைய மாணவ மாணவிகள் கோடைகாலத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் மாணவர்களுக்கான கோடைகால இலவச கலைப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. வரும் 5-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை மாலை 4 மணி முதல் 6 மணிவரை நடைபெறும்.பரதநாட்டியம், ஓவியம், குரலிசை, சிலம்பம், நாட்டுப்புற கலைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது .
தென்னிந்திய சுற்றுலா திட்டத்தின் கீழ் ஐஆர்சிடிசி மதுரை டூர் பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது . மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருப்பதி மற்றும் மல்லிகார்ஜுனா ஆகிய இடங்கள் இந்த சுற்றுலாத் தொகுப்பில் அடங்கும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இது தவிர 9001094705 மற்றும் 9001040613 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.
பெரம்பலூர் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 2023 விதி 268(2) இன் படி கால கெடுவுக்குள் வரி செலுத்துவோர் 2024-25 ஆண்டிற்கான அரையாண்டு சொத்து வரியை (ஏப் 30 )தேதி (ம) இரண்டாவது அரையாண்டு சொத்து வரியை (அக் 31) தேதிக்குள் கணினி வழியில் செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை 5 % சலுகை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் ரயில் பயணம் செய்பவர்கள் ஐஆர்சிடிசி விற்பனை செய்யும் உணவுகள் மற்றும், ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் விற்கப்படும் உறவுகளை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலை தென்னக ரயில்வே சார்பில் தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் நேற்றிலிருந்து, 20 ரூபாய் மீல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டம் ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பவானிசாகா் கோடேபாளையத்தை சோ்ந்தவா் பன்னீா்செல்வம்.மனைவி துா்கா.இவருக்கு புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 20 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது.அங்கு கடந்த 24 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.அவரது உடல்நிலை மோசமடைந்ததை எடுத்து கோவை ஜிஎச் அனுப்பி வைத்தனர்.நேற்று அவர் உயிரிழந்தார்.மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.