Tamilnadu

News April 28, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று மதியம் தனது காரில் மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2024

ஈரோட்டில் ட்ரோன்களுக்கு தடை

image

ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் ட்ரோன்கள் மற்றும் வான்வழி ஆளில்லா வாகனங்கள் பறக்கவும் தடை விதித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

News April 28, 2024

காஞ்சிபுரம் அருகே 10 இளைஞர்கள் கைது

image

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ரிஷப்(18), அபினேஷ்(23), மோன்பாபு (21), சரவணன், பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்தன், கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ் உள்ளிட்ட 10 பேரை  ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் அதிரடியாக கைது செய்துள்ளார். 

News April 28, 2024

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

image

புதுவைக்கு வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழகத்தை போல்
வெயில் தாக்கமும் இல்லை. இதனால் வெளி மாநிலங் களில் இருந்து புதுவைக்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது . சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக கடற்கரை, பாண்டி மெரினா, ஊசுட்டேரி படகு உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

News April 28, 2024

கள்ளக்குறிச்சி சிறுவனுக்கு அரசு மரியாதை 

image

கள்ளக்குறிச்சி வட்டம்,கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து வினோத்தின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (28.04.2024) கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள சிறுவனது வீட்டிற்கு நேரில் சென்று, உடலுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News April 28, 2024

தேனி அருகே ஒருவருக்கு கத்தி குத்து 

image

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன் தினம் (ஏப்.26) இரவு ஆடலும், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தகராறில் கமலேஷ் (18) என்பவரை சுதாகா், அவரது தந்தை பாரதிராஜா உள்ளிட்ட 7 பேர் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் சின்னமனூர் போலீசார் சுதாகர்,அவரது தந்தை பாரதிராஜாவை நேற்று (ஏப்.27) கைது செய்தனா்.

News April 28, 2024

சேலம் கோட்டத்தில் ரயிலில் சிக்கி 126 பேர் பலி

image

சேலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதத்தில் 126 பேர் ரயில் சிக்கி பலியாகி உள்ளனர். சேலத்தில் 40 பேர், ஜோலார்பேட்டையில் 46 பேர், காட்பாடியில் 30 பேர், ஓசூரில் மற்றும் தர்மபுரியில் தலா 5 என மொத்தம் 126 பேர் ரயிலில் சிக்கி இறந்துள்ளனர் என்று சேலம் தெற்கு ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

சமுதாய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய இளைஞர்கள், முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இந்த விருதுக்குத் தலா 3 ஆண்கள், 3 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் தகுதியானவர்கள் இணையதளம் மூலம் மே 1-ஆம் தேதி முதல் மே 15- ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 28, 2024

வேலூர்: அரசு பேருந்து மோதி தம்பதி படுகாயம்

image

காட்பாடியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி அனிதா(36). அனிதா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் பைக்கில் தாராபடவேடு அருகே வந்தபோது இவர்கள் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். காட்பாடி போலீசார் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அனிதா வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்

News April 28, 2024

தர்மபுரி அருகே கோர விபத்து

image

காரிமங்கலம் இன்று பெரியாம்பட்டி மேம்பாலம் அருகில் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்களை மீட்டு அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!