Tamilnadu

News April 28, 2024

மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ

image

கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் வினோத் என்பவர் வாகன விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

News April 28, 2024

சிவகங்கை: கல்லூரி மாணவி மாயம் 

image

ராகினிப்பட்டியைச் சேர்ந்த விஜயலட்சுமி (19) தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் உள்ள கல்லூரிக்குப் போவதாக கூறிச் சென்று சென்றவர் எங்கு சென்றார் தெரியவில்லை என அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் இன்று சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2024

புதுவையில் விளையாட்டு போட்டி

image

புதுவை அரசு கல்வித்துறை & விளையாட்டு துறை சார்பில், 17 &19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், கதிர்காமம் அரசு பள்ளி, புதுவை பல்கலைக்கழகம், அமலோற்பவம் பள்ளி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

News April 28, 2024

அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

image

சுட்டெரிக்கும் வெயிலை தாங்கும் விதமாக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர், மோர் பந்தல் திறக்க அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அந்த வகையில் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் ஐந்து இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்தார். அதுமட்டுமல்லாமல் இன்று பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.

News April 28, 2024

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மையத்தில் ஆய்வு

image

சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன்
வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள்
உள்ளிட்ட இம்மையத்தின் அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனை சேலம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 28, 2024

நீலகிரி ஆட்சியர் அருணா விளக்கம்

image

நீலகிரி கலெக்டர் அருணா கூறியுள்ளதாவது; அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி செயலிழப்பு ஏற்பட்டது. வேறு எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளன. சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக இருக்கிறோம் என்றும் (CCTV) கேமரா செயலிழப்புக்கு விளக்கம் அளித்து உள்ளார்.

News April 28, 2024

நாமக்கல்: பள்ளி கல்வி துறை ஆய்வாளர்கள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு பள்ளித் துணை ஆய்வாளர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று இராசிபுரம் சாந்தி இன் கிராண்ட் கோல்டன் காலில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்புடன் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக காந்தியவாதி இரமேஷ் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டார்.

News April 28, 2024

ராயக்கோட்டை பகுதியில் பலாப்பழம் விளைச்சல்

image

ராயக்கோட்டை பகுதியில் மழையின்மையால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் விவசாய சாகுபடியான காய்கறிகள், பூக்கள் மற்றும் கொத்தமல்லி, புதினா போன்றவை பசுமையாக காட்சியளிக்கிறது. தென்னை, மா, பலா போன்ற மரங்களும் நல்ல பலனை கொடுத்து வருகிறது. பலா மரங்களில் பலா காய்கள் கொத்து, கொத்தாக காய்த்துள்ளதால் பாரப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

News April 28, 2024

துணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் மோசடி

image

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி நேற்று (ஏப்.27) நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவரின் பெயரில் முகநூல் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் கணக்கு துவங்கி பொதுமக்களிடம் உரையாடல் நடத்தி பணம் பறிப்பதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

தேனி: பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்த நகராட்சி

image

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்களுக்கு வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!