India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு அருகே தனியார் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் கல்லூரி விடுதியில் நேற்றிரவு உணவு சாப்பிட்ட 80-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் காணொளி காட்சி வாயிலாக தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும் , பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 38 டிகிரி செல்சியஸ், புவனகிரி 38 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 38 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 41 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2023-24ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட அளவில் குன்னம் வட்டம், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருது பெற்ற பள்ளிகளுக்கு நேற்று முதன்மை கல்வி அலுவலர் (கூபொ) பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அண்ணாதுரை ரொக்க பரிசு விருதுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.26 லட்சம் மாணவ மாணவியருக்கு வழங்குவதற்காக இலவச பாடநூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மற்றும் சிவகாசி என இரு கல்வி மாவட்டங்களில் 1613 பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் 1613 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி அன்று அனைத்து பாடநூல்களும் வழங்கப்பட உள்ளன.
கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடக்கிறது. இதற்கான டிக்கெட்டுகளை விற்க கவுண்டர் ஒன்றை எந்த வித அனுமதியும் பெறாமல் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் நேற்று குத்தகைதாரர் அமைத்து டிக்கெட் விற்பனை செய்தார். தகவல் அறிந்து திற்பரப்பு பேருராட்சி ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை அம்பேத்கர் சாலையில் தரமற்ற புதிய தார்சாலை அமைத்ததாக எழுந்த புகாரையொட்டி , அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பெண்ணையாறு மற்றும் சங்கராபரணி ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நீரினை சேமித்து சுத்திகரித்து குடிநீர் வினியோகத்துக்கு பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் மணமேடு, பிள்ளையார்குப்பம் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் மாநில எல்லையான பாலாற்றில் வனத்துறை மற்றும் காவல் துறை சார்பில் சோதனை சாவடி அமைக்க ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் மாநில எல்லையான பாலாற்றில் வன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை: புழல் டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த கிளியோபஸ் ஜெரால்டு(12) என்பவரை, இவரது பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்து வந்த 2 நாய்கள் கடித்தது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் படி, நாயின் உரிமையாளர் ஜான் பெட்ரிக்ஸ் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பொன்னமராவதி அருகே, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் கேசம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (75). இவர் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி வந்த இவர் சுமை ஆட்டோ நிறுத்தம் அருகே உள்ள மரத்தின் கீழ் விஷத்தை குடித்து இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் சின்னையாவின் உடலை கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.