India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் திருக்களம்பூர், அண்ணா நகர் கிராமம் பூச்சொரிதல் திருவிழா முன்னிட்டு திருக்களம்பூர் விளையாட்டு மைதானத்தில் இன்று மது ஒழிப்பு விழிப்புணர்வுக்கான 5 கி.மி தொலைவுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுதிறனாளி நபர் எஸ்.கலைச்செல்வன் பங்கேற்று தமது திறமையை வெளிப்படுத்தினார்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் சரத்குமார் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அர்ச்சகர்கள், நடிகர் சரத்குமாருக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் ஆரத்தி செய்து சிறப்பித்தனர்.
நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்
மே 1ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 19 வயதுக்கு உட்பட்டவர்கள், ஏப்ரல் 30ஆம் தேதி மதியம் 3 மணிக்கு நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று, பயிற்சி முகாமில் பங்கேற்கலாம் என நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜூலியஸ் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
புதுவை அரசு மின்துறை (தெற்கு) கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோயில், வாதானூர், கரியமாணிக்கம் உட்பட்ட மின் நுகர்வோர்கள், மின்கட்டணம் நிலுவை கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்துறை தெற்கு கோட்டம் செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே சத்யா காலனி பகுதி பகுதியைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(23). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது,புதிய பேருந்து நிலையம் இணைப்பு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் மந்திரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நாளை முதல் மே மாதம் 13ஆம் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04312420685 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரதீப்குமார் இன்று அறிவித்துள்ளார்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, முதல்வர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.மேலும் விண்ணப்பிக்க மே 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாலை 4 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
கடலூரில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அதனால் இன்று கடலூர் துறைமுகத்திற்கு குறைந்த அளவே மீன்கள் வந்ததால், மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் வஞ்சிரம் ஒரு கிலோ 1000 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் பிற மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
மதுரை, பேரையூர் அருகே அத்திப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் புதுமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் அத்திப்பட்டி, வடகரை, மங்கல்ரேவு
மற்றும் சின்னக்கட்டளை ஆகிய 4 பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று முதல் 30ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடுவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்திரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மூடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் வாகனங்களை மே மாதம் 4 வது வாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களை தயார் செய்து ஆய்வு நாளன்று ஆய்வுக்கு உட்படுத்தி உரிய சான்று பெற்று இயக்க வேண்டும் என நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.