Tamilnadu

News April 28, 2024

விருதுநகரில் இலவச கண் சிகிச்சை முகாம் 

image

விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.பின்னர் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

News April 28, 2024

தென்காசி தமுஎகச மாவட்ட குழு கூட்டம்

image

தென்காசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு ஆசிரியர் ராஜாராம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில அளவில் கவிதை பயிற்சி முகாம் நடத்துவது மாவட்ட அளவில் வகுப்பு உறுப்பினர் பதிவு புதிய கிளை அமைப்பது தொடர் நிகழ்ச்சி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News April 28, 2024

யானையை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.7.20 லட்சம்

image

கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களம் என்ற யானை உள்ளது. 44 ஆண்டுகளாக, கோவில் நிர்வாகத்தால் இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மங்களம் யானையின் முழுமையான பராமரிப்பு செலவினத்திற்கான மாதந்தோறும் ரூ.60,000 வீதம் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை தனியார் நிதி நிறுவனம் நன்கொடையாக வழங்கியது.

News April 28, 2024

நாமக்கல் பழக்கடைகளில் திடீர் சோதனை

image

நாமக்கல் மாவட்டத்தில், பல இடங்களில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அருணன் உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ப.வேலூரில் நடைபெறும், இன்று ஞாயிற்றுக்கிழமை வார சந்தையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரசாயன பழங்களை அழித்தனர்.

News April 28, 2024

கடலூரில் நீச்சல் வகுப்பு துவக்கம்

image

கடலூர், அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2ஆம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைந்தது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30ஆம் தேதி முதல் மே மாதம் 12ஆம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 28, 2024

வனப்பகுதியில் வனத்துறையினர் எச்சரிக்கை

image

சேலம் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீ தடுப்பு குறித்து வனத்துறையினர் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வனத்துக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

News April 28, 2024

திருச்சியில் காரைக்குடி வாலிபர் சடலம் 

image

காரைக்குடியைச் சேர்ந்தவர் பிரசாந்த். வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு வந்தார். இந்நிலையில், திருச்சியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இவர் நேற்று வரகனேரி ஓடத் தெரு பகுதியில் உள்ள சாக்கடையில் சடலமாக  கிடந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அவர் எப்படி இறந்தார்?என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2024

கடலூர்: விபத்தில் 3 பேர் படுகாயம்

image

பண்ருட்டி தாலுகா வானமாதேவியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (27). இவர் தனது நண்பர்கள் சரண்ராஜ், அருண்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் இன்று வான்பாக்கம் சாலையில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது . இதில் பலத்த காயமடைந்த சச்சிதானந்தம் உள்ளிட்ட 3 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2024

வேலூரில் இன்று 106.0°F வெயில் பதிவானது

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 28)  அதிகபட்சமாக 106.0°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெளியே செல்லும் பொதுமக்கள் தண்ணீர் மற்றும் முன்னெச்சரிக்கையாக செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

தாக்குப்பிடிக்குமா சென்னை!

image

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டு வருகிறது. இதில் சென்னை தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகமாக கையாளும் இடமாகும். தற்போது வீராணம் ஏரி வறண்ட நிலையிலும், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 6.88 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. மொத்தத்தில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமான எரிகளில் நீர் இருப்பு 11.75டிஎம்சி ஆக உள்ளது. இந்த கோடையை சென்னை தாக்குபிடிக்குமா?

error: Content is protected !!