India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரைக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருமங்கலம் ஒன்றியம் T.புதுகுப்பம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மனுக்கு நேற்று இரவு கல்யாண வைபோகம் திருமணம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் திருக்கல்யாண கோலத்தை கண்டு களித்தனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வேலூர் மீன் மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல் 28) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
மண்டபம் முகாம் உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரி. இவரது குடிசை வீட்டில் நேற்று நள்ளிரவு மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்த தகவலறிந்த மண்டபம் பேரூராட்சித் தலைவர் ராஜா, முனீஸ்வரிக்கு நிவாரணத் தொகை வழங்கினார். கவுன்சிலர்கள் சம்பத் ராஜா, கலாவதி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14-வயது உட்பட்டோருக்கான மாநிலங்கள் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களுக்கான சிறப்பு தேர்வு முகாம் வரும் மே 1ஆம் தேதி காலை 8 மணி அளவில் ராணிப்பேட்டை பாரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையில் நான்கு மாத தடைக்கு பின்பு தற்பொழுது குளிக்க வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்.28) விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
ஈரோடு மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 80 முதல் 100 பேர் வரை பணியில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பான பொதுமருத்துவம் (எம்.பி.பி.எஸ்) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) மருத்துவ படிப்புகளுக்கு நடப்பாண்டுக்கான நீட் தேர்வு, மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில், 4,700 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்கப்பட்டது .
ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நதியா கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவில் உள்ள டேராடூன் பகுதியை சார்ந்து கல்வி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையறிந்த கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. திருவிழாவிற்காக பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் நிற்பதற்கான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி இன்று துவங்கியது.
Sorry, no posts matched your criteria.