Tamilnadu

News June 2, 2024

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

image

ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்று குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை எளிதாக்க ஐஸ்-பிரேக்கிங் பயிற்சி பட்டறை பள்ளி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News June 2, 2024

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு

image

தர்மபுரி, பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி கிராமத்தில் விவசாய கிணற்றில் பசு மாடு ஒன்று தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறைக்கு நேற்று (ஜூன் 1ஆம்) தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் போக்குவரத்து செல்வம் தலைமையிலான குழு பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்‌.

News June 2, 2024

ரயிலில் இருந்து இறங்க முயன்று தவறி விழுந்தவர் உயிரிழப்பு 

image

அருமனை மாத்தூர் கோணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவர் கேரளா மலப்புரத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மலப்புரத்தில் இருந்து ரயிலில் வந்து கொண்டிருந்தார். இன்று காலை ரயில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது ராஜேந்திரன் கீழே இறங்க முயன்றார். ரயில் நகர்ந்தால் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் உயிரிழந்தார்.

News June 2, 2024

கட்டிட கலை சார்ந்த கண்காட்சி

image

கோவை அவினாசி சாலை சிட்ரா அரங்கில் கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக அவனி ரீச் 24 கட்டிட கலை சம்பந்தமான பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த பயிற்சி முகாமில் கட்டிட கலை தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான செயல் விளக்கம் சிறந்த கட்டடக்கலை நிபுணர்கள் மூலம் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News June 2, 2024

பெரம்பலூரில் மழை

image

பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், எளம்பலூர் சாலை, நான்கு ரோடு, துறைமங்கலம், ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7.30 மணிமுதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 2, 2024

ஆளுநர் மாளிகையில் தெலுங்கான உருவான தின விழா

image

தெலங்கானா உருவான தின விழா ஆளுநர் மாளிகையில் நேற்று (ஜுன்.1) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சிறந்த நிர்வாகம் மற்றும் நல்லாட்சிக்காக மாநிலங்களின் தோற்றம் எப்படி இருந்தன என்பது குறித்து விவாதித்தார். இதனையடுத்து பாரம்பரிய நாட்டுப்புற கலையான, கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட உணர்வுபூர்வ ஒக்கு டோலு நடனம் நடைபெற்றது. இது பார்வையாளர்களை முற்றிலும் மெய்சிலிர்க்க வைத்தது.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை தி.மலை மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!