India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் பஸ் நிறுத்தம் அருகே இன்று(ஏப்ரல்.29) சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு நபர்கள் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் இருவரும் மாமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நெல்லை தாழையூத்தை சேர்ந்தவர் சந்தன மாரிமுத்து .நேற்று முன்தினம் இவர் கயத்தார் அருகே சூரிய மினிக்கண் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். நேற்று அதிகாலை நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இவரை ஹரி பிரசாத் உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தன மாரிமுத்து உயிரிழந்தார். கயத்தாறு போலீசார் ஹரி பிரசாத் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 9,600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கெங்குவார்பட்டி அருகே வத்தலகுண்டு மெயின் ரோட்டில் அழகரம்மாள் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவரது மூத்த மகன் விஜய் என்பவர் ஹோட்டலுக்கு வந்து சொத்தை பிரித்து தரக்கோரி தகராறு செய்து அங்கிருந்த அரிவாள் மனையை எடுத்து அழகரம்மாவின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் விஜயை கைது செய்துள்ளனர்.
தென் மண்டல காவல் துறைத் தலைவா் அலுவலகத்தில், மதுரை பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் காளிதாஸ் அளித்த புகாா் மனு: தோ்தலுக்கு, கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட நிதியை தொகுதி அமைப்பாளா் வெற்றிவேல், மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் ஆகியோா் முறையாகப் பயன்படுத்த வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நான்தான் காரணம் என்று அவர்கள் என்னை அவதூறாகப் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுக்கின்றனர்”என்று கூறியுள்ளார்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு சிசிடிவி கேமரா நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரை இயங்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர் தொழில்நுட்ப கோளாறல் ஏற்பட்ட பிரச்சனை சரிசெய்யப்பட்டதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கார தெரிவித்துள்ளார்.
ஆவடி அடுத்த மிட்டனமல்லியில் நேற்றிரவு முன்னாள் ராணுவ வீரரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தற்போது செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்த திவ்யா என்ற கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த நிலையில், நேற்று(ஏப்.28) சிகிச்சை பலனின்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் திவ்யா உயிரிழந்தார். இதனை அடுத்து, சரியான முறையில் சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே உள்ள நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மிட்டனமல்லியில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் சிவன் நாயர் (68), அவரது மனைவி பிரசன்னா (63) ஆகியோர் நேற்று வீடு புதுந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை அவரது வீட்டிற்கு சிகிச்சை பார்ப்பது போல் வந்த நபர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்து தப்பித்தனர். தடையங்களை சேகரித்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் மே தினத்தை முன்னிட்டு நாளை(ஏப்.30) ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. பாளையங்கோட்டை இக்னேசியஸ் பள்ளி மாணவியின் ஓராண்டு ஓவியப் படைப்புகள் “99 தமிழ் தாம்பூல பூக்கள்” எனும் தலைப்பில் கண்காட்சியில் இடம் பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் மையம் செய்து வரும் நிலையில் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.