India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த எபினனேசர் (27) நேற்று கருமண்டபத்திலிருந்து பஸ் நிலையம் நோக்கி பைக்கில் வந்தார் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது. பலத்த காயமடைந்த எபினேசரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி எபினேசர் நேற்று இரவு இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் அருகே கோவில்பாளையம் பகுதியில் உள்ள அப்பகவுண்டர் தோட்டத்தில் 35 வயது உடைய ஆண் ஒருவர் நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த நன்னியூர் விஏஓ கவிதா நேரில் சென்று விசாரணை செய்து புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீசார் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை மேல்கரை வீதியில் வசித்து வருபவர் சையது இப்ராஹிம் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 100 கிராம் வெள்ளிபொருட்கள் , புடவைகள் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நாமக்கல் பகுதியில் எலுமிச்சை பழம் விலை உயர்வடைந்துள்ளது. எலுமிச்சை பழம் கடந்த வாரம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் வாங்கல் அருகே மன்மங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வாங்கல் போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ரவிக்குமார், குமார், உதயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்.29 முதல் மே.3 வரை 5 நாள் சுற்றுப் பாயணமாக கொடைக்கானலில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுக்க சற்றுமுன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு புறப்படார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்கிறார். அங்கு 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதிய மருத்துவர் செவிலியர் இல்லாத காரணத்தால் நேற்று நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் போட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பணியில் இருந்த தலைமை செவிலியர் மற்றும் செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சித்ரா பவுர்ணமி திருவிழாவில் நகர்வலம் சென்ற தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மேல் கள்ளர் வேடம் தரித்து பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. அன்று இரவு நகர்வலம் வந்தார். நேற்று காலை 9 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். மதியம் திருமஞ்சன அலங்காரம் நடந்தது. பல்லக்கில் புறப்பட்ட பெருமாள் இரவு தனது இருப்பிடமான தாடிக்கொம்பு கோயில் சன்னதிக்கு வந்தடைந்தார்.
தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் அடிவாரத்திலிருந்து மலையேற துவங்கியுள்ளனர். அப்போது, அவர்களில் புண்ணியகோடி என்பவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை மீட்ட நண்பர்கள் பூலுவபட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வந்தவாசி பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் தனது உறவினரின் குழந்தையான 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில்,சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்தவாசி மகளிர் போலீசார் தேவேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.